வெள்ளி, 2 ஜூலை, 2010

நட்பு (பிரியாது )

பிரிவை நினைத்து கவிதை எழுதினாய் ,
காகிதம் நனைந்து விட்டதோ ?
பிறகு தான் தெரிந்ததோ
வந்தது கவிதை அல்ல ,
உன் - கண்ணீர் என்று

பிரிவிற்கு கரணம் நீயே
காத்திருக்க சொல்லி நெடுநேரம்
காக்க வைப்பது சிலமுறை என்றால் சரி
எப்போதும் வராது ஏமற்றும் -+உனக்கும்
கண்ணீர் வருகிறதோ அடடா !

நட்பு பிரிந்து விட்டதோ என்ற வேதனையால்
உன் -வேலைய ஒதுக்கி கவிதை எழுதி
அனுப்ப நேரம் ஒதுக்கிய கட்டாயம் தான்
உண்மை அன்பும் நட்பும் தோழமையே
அன்பும் தேடுதலும் மாறாததுதான்
என்றும் உண்மை நட்பு தோழமையே.



******************************************************

நட்பு
நட்பு உடலால் பிரிந்தாலும்
என்றும் உள்ளதால் பிரியாது
உண்மை நட்பு உலகத்து மூலைதனில்

எங்கிருந்தாலும் என் நொடியிலும்
மறவாது மாறது அன்புடன் என்றும்

பிரிவு என்பது வார்த்தையில் இல்லை
வாழும் வாழ்க்கையிலும் இல்லை

காத்திருக்க சொல்லி காலமாய் ஏமாற்றினாலும்
காத்திருந்து காத்திருந்து நொந்த
உள்ளத்திற்கு தெரியும் பிரிவின் துயரம்

சொல்லாமல் செல்லும் நட்புக்கும்
சொல்லி செல்லும் நட்பிற்கும்
காத்திருத்தலின் துயரம் தெரியாது

தீடீர் என்று மாறி புரியாது பிரியும்
நட்பிற்கு தன் தவறு புரியாது என்றும்

தன் தவறு புரியாது
கோபபடுவது அர்த்தமில்லாத நட்பு
உண்மை அன்பும் இல்லை
உண்மை நட்பும் இல்லை

******************************************************************

எல்லாமே நட்புதான்

சிசுவாய் ஜனித்து
சிந்தையில் பட்டு
முகம் பார்த்து சிரித்து
உட்சி முகர்ந்து நம்மை -முத்தமிட்ட
முதல் அன்பு நட்பு -அம்மா !

தலைமேல் தூக்கி
தட்டாமலை சுற்றி
கட்டியணைத்து முத்தமிட்டு
கரம் பிடித்து நடை பயிற்றுவித்து
கடை வீதி அழைத்து செல்லும்
தன் -சுமை தாங்கி பணியில்
தோள் கொடுக்க வந்த தங்கமென்று
சந்தோஷ படும் அன்பு நட்பு -அப்பா!

நம்முடன் ஜனித்து
இன்பத்திலும் துன்பத்திலும்
சம பங்கு உரிமை கொண்டு
பகிர்ந்தளித்து பாசமழை பொழியும்
அன்பு நட்புக்கள் -சகோதர சகோதரிகள் !!

நன்மை தீமை எடுதுறைத்து
நீதி கதைகள் பல சொல்லி
பழமையை எடுதுறைத்து
பக்குவ படுத்தி தூங்கவைக்கும்
அன்பு நட்பு -தாத்தா பட்டிகள் !!!!

கை தொட்டு விளையாடி
கூடி ஆடி மகிழ்ந்து
சண்டை இட்டு பிரிந்து மீண்டும்
கூடி விளையாடும் அறிய பருவத்தின்
அன்பு நட்புகள் தெரு -தோழர் தோழிகள் !!!!!!!!!

பகிர்ந்து உண்டு
பாசவலை பின்னலில்
புரியாததை ஆராய்ந்து தெளியும்
விடலைகளின் அன்பு நட்புகள் - பள்ளி தோழர்கள் !!

இன்பம் துன்பம் புரிந்திடினும்
மனம் விட்டு பகிர்ந்து
தோள் சாய்ந்து ஆறுதல் தேடி
அடைக்கலம் தேடும் வாலிபத்தின
அன்பு நட்புகள் -கல்லூரி தோழமைகள் !



விழாக்கள் திருமணங்களில் \
அழைப்பிற்கு இணங்கி கலந்து கொண்டாலும்
கஷ்டம் நஷ்டம்
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
அழையாது தேடிவந்து
தோள் கொடுத்து உதவும்
அன்பு நட்புக்கள் -உறவுகள் !

கரம் பிடித்து எழுத பழக்கி
ஆறிவுரை கூறி நெறி படுத்தி
வாழ்க்கைக்கு வழிபடுத்தும்
அன்பு நட்புக்கள் -ஆசிரியர்கள் !!

சிறகடித்து பறக்கும்
சின்ன சின்ன ஆசைகளையும்
சிந்தைக்கு எட்டியவரை பேசி
அன்பால் கலந்து ஆசையாய்
மனத்தால் இணைந்து
எத்துனை துயர் வந்த போதிலும்
எண்ணியவாறு கரம் பிடிக்கும்
சாதிக்கும் அன்பு நட்புக்கள் -காதலர்கள் !!!!

திருமண பந்தத்தால் இணைக்கப்பட்டு
இரு மனமும் ஓரு மனமாக கலந்து
நமக்கு நாமே துணை என்று
மாலை இட்டு கரம் பிடித்து
நன்மை தீமை நாலும் பட்டுணர்ந்து
நன் மக்களை ஈண்ற்றேடுது
உயிரோடு உயிராய் கலந்து
தோள் சாய்ந்து துன்பத்தில்
கண்ணீர் துடைத்து உன்னதமாய்
ஒன்று பட்டு வாழலும்
அன்பு நட்புக்கள் -தம்பதிகள்

eatthakaiya natpakinum
angu adikal asthivaaram என்பதோ
நட்பு எனும் adipadaithaan
நட்பு முறை இன்றி எவ்வித நட்பும்
ஒன்றிணைந்து வாழுதல் முடியாது

******************************************************

புதன், 30 ஜூன், 2010

மனம்
மனம் நினைப்பது எல்லாம்
மனிதற்க்கு கிடைபதில்லை..

மனிதற்கு கிடைப்பதை எல்லாம்
மனம் ஏற்று கொள்வதும் இல்லை

இருபதைவிட்டு இல்லாததை தேடுவதே
குரங்கான(மனித) மனம்

************************************************************

எதிர் வீட்டு பெண்ணே

எதிர் வீட்டுக்கு புதிதாய் குடி வந்தவளே
புத்தம் புது மலராய் சிரிப்பவளே
தினம் -உன் உதடோர புன்னகையில்
எனையே நான் மறந்தேனே!!!!!!!!!!!!

கருந்திராட்சையாய் சுழலும் -உன்
கண்ணசைவில் கணவுகள் பல கண்டேனே
நீ -என்னிடம் பேசாது இருந்தாலும்
தினம் தினம் சந்தோஷத்தில் திளைத்தேனே !!!!!!!!!

நீ *இதழ் திறந்து செப்பிய
இன்றைய ஓரு வார்த்தையில் -என்
உள்ளம் நொறுங்கி போனதடி

தம்பி நீ சாபிட்டயோ என்று கேட்டதாலே
என் -எதிர் வீட்டு பெண்னே
இனி என் எதிர் காலம் எனக்கு
சூனியமாய் தெரிகிறதே உன் வார்த்தையால் ?????/

*************************************************


சோலார் பல்பு
நீள் நெடுஞ் சாலையில்
வரிசையில் நின்று
வெண்ணிலவாய் பிரகாசித்தாலும்
தன் -உடல் உஸ்நத்தால் வெட்கப்பட்டு
அடிக்கடி கண் சிமிட்டும்
சோலார் பல்புகள்
*******************************************


latha:
அ ஆ
அ = அன்பில் கரையும் உயிர்களாம்
ஆ =ஆசையை காட்டும் மனங்களாம்
இ =இனிமையான குணங்களாம்
ஈ =ஈடில்லாது உழைக்கும் மனிதர்களாம்
உ =உறவை உணரும் மனிதர்களாம்
ஊ =ஊருடன் கலந்து வாழ்பவர்களாம்
எ =எளிமை எனும் வாழ்விலும்
ஏ =ஏற்றம் கண்டு வாழ்ந்திடுவார்
ஐ =ஐயமின்றி அமைதியாய்
ஓ =ஒன்று பட்டு வாழ்த்திடினும்
ஓ= ஓரவஞ்ச மனம் உண்டு
ஒள =ஒளவை சொன்ன பழமொழி எல்லாம்
அக்கு=அக்குதேஎன்று மறந்திடுவார் (

தமிழன் என்று சொல்லினும்
தாழ்ந்த குணம் உண்டாட -அரசியலில்

செம்மொழி எனும் மாநாட்டின் ஆடம்பரம்
இனி-புதிது புதிதாய் வரிகள் பிறக்கும்
சட்டங்கள் தம் கையில் எனும் நிலையில்

பாவப்பட்ட பாமரர்களோ அரசியலின்
சூழ்சியறியாது தாரை தாரையாய்
ஊர்வலமாம் செம்மொழி மாநாட்டை
கண்டு ரசிக்க கோவையை நோக்கி
***********************************************************

புதன், 23 ஜூன், 2010

என்னுயிரே
உயிராய் மதித்து
அன்பாய் கலந்து
ஆசையாய் இணைந்து
உடலால் கலந்து

உயிர்ப்பித்த இன்னுயிரே-நீ
பின்னடமாய் உருண்டு
ஐயிரண்டு திங்கள்
கருவறையின் கவசத்தினுள்
உயிராய் வளர்ந்து
என்னை மறுபடியும் உயிர்ப்பித்து

உன் -உயிராய் இப் பூ உலகில்
ஜனித்த சிசுவே -உன்
உன் -பட்டு உடலை தடவி

உன் -பூ பாதத்தில் முத்தமிட்டதும்
என் -வலி எல்லாம் மறைந்ததுவே என்னுயிரே

சந்தோஷத்தில் இரு சொட்டு கண்ணீர்
உன் -பாதத்தை தொட்டதும்
நீ -உன் உடல் சிலிர்த்து நெளிந்ததும்

என் -கண்கள் தேடியதோ
அம்மா என்று அழைக்க
உண்னை என்னுள் உயிர்ப்பித்த
என்னுயிர் உன் தந்தையைதான் என்னுயிரே
*********************************************************************************

நீயும், அவளும்

நீயோ ஆண் சந்ததியை உருவாக்குவாய்
உன் மனைவியோ பெண்
சந்ததியை உயிர்பிப்பவள்



இருவரும் இன்றி தனித்து
ஜனனமும் இல்லை -உன்
சந்ததியும் இல்லை

*****************************************
இதயம்
உன் -இதயம் தொட்ட அவளின் உருவம
உன் - நிழலை தண்டி போகிறதே
உன் -நண்பனை நோக்கி

காதல் எனும் மோகத்தால்
உன் -உயிரோ அவளின் பின்
நிழலாய் தொடர்கிறது சோகமாயோ ?????????/

***************************************************


கடல்
பேரலையாய் ஆர்பரித்து
துள்ளி துள்ளி பாய்ந்து வந்து
அமைதியாய் கரைத்தொட்டு
வெனுரையால் முத்தமிட்டு
அமைதியாய் செல்லும் -உன்
அழகு என்ன? அடடா !அடடா !

பொங்கிவரும் பேரலையுடன்
குளிர் தென்றலை அள்ளிவந்து -தெளித்து
அனைவரையும் ஆனந்தம் கொள்ளசெய்யும் -உன்
அழகு என்ன?அடடா !அடடா !

*******************************************************

புதன், 16 ஜூன், 2010

இமைகள்

மூடிய இமைகளில்
உறங்கி கிடக்கும்
உண்மையும் பொய்மையும்
எத்தனை எத்தனையோ?

********************************************
ரோஜா

இதழ் பிரிந்த ரோஜாவே
உன் -அங்கம் பிரிந்ததென்று
ஆதங்கமோ உனக்கு

இளமை எனும் அழகும்
முதுமை எனும் மூப்பும்
மனிதர்களுக்கும் உன் போல்தான்

இளமையில் அழகால் மிளிர்ந்து
முதுமையில் தோள் சுருங்கி வாடுவது

*****************************************

விழிகள்

அழை பாயும் விழிகளில்
என்ன எதிர் பார்போ ?
எந்த யுகத்தில்தான் வரதட்சனை
கேட்காது மணக்கவரும்
ஸ்ரீ ராமர்கள் கிடைப்பார்கள் என்றா?

உதடு பிரியாதது கூறுவது யாதோ ?
ஏகங்களும் எதிர் பார்ப்புகளும்
பெண் இனங்களுக்கு விதிக்கப்பட்ட
நீதி சாசனம் என்றோ ?

பாரதி கண்ட புதுமை பெண்கள்
மலர்ந்தாலும் மறைந்தாலும்
திருமண சந்தையில் பெண் இனங்களின்
நிலைமைக்கு எந்த மறுத்தாலும் வரவில்லையே

எப்போது பிறக்கும் விடிவு என்ற
ஏக்கமோ இக் கண்களில்

*********************************************

அவளுடைய கண்கள்

கூறிய இரு அம்பால் துளைத்த என் -இதயம்
குருதி பொங்காது சந்தோஷத்தில் திளைப்பது
துளைத்தது அவள் கூறிய கண்கள் என்பதாலோ !!!!!!!!

*******************************************
கருப்பு

வண்ணங்களில் நீ தெறித்தால்
அலங்கோலம் என்பர்

உன்னில் வண்ணங்கள் தெறித்தால்
அதை அழகு என்பர்

எப்படியும் நீதான் அழகு என உணராத மூடர்கள்

*******************************************************

மின்னல்

பூமியை தொட்ட மினல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?
உன் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்தனவோ?

**********************************************

அன்பின் அடையாளம் நீ

அன்பிற்கு அடையாளமாய்
அளிக்க (அழைக்க )படுகிறாய் -நீ
உன்னை அழகு படுத்துவதும்
அசிங்க படுத்துவதும் மனிதர்களே

மனவறையிலும் சரி
பினவரையிலும் சரி
முன்னுரிமை உனக்குதான்
அன்பின் அடையலாம் என்று
**********************************************************
நீயும் நானும் ஒன்று
அலையில் தத்தளிக்கும்
பாய்மர கப்பலே -என்
நிலையும் உன் போன்றே

காதல் எனும் கடலில்
கரைசேர முடியாது
தத்தளிக்கும் என் -இதயம்

உன்னை கரை சேர்கக்
துடுப்பும் ஆளும் உண்டு
எனை கரை சேர்க்க -என்
காதலியும் அவள் காதலும்
தடை இன்றி கிடைக்குமோ?
**********************************************************
தீக்குச்சி

தீக்குச்சியை உரசினால் -அதன்
முனை பற்றி எரியும் -நொடியில்

உன் -பார்வை உரசும் ஓவ்வொரு
நொடியும் என் தேகம் எரியுதடி
உன் -அன்பின் கனலை தாங்காது பெண்னே!

*****************************************************************************
நிணைவுகள்

நீரில் எழுதிய -உன்
நிழல் ஓவியமும்
என் -நினைவில் எழுதிய
உன் -உயிர் ஓவியமும்

நீ எனை மறுத்ததால்
என் -கண்ணீரில் கரைந்து
மார்டன் ஓவியமாகி
மாறாக முடியாத நிணைவு சின்னமாய்
என் -மனதில் என்றும்

**************************************************************

தீ

தீபமாகவும் கற்பூரமகவும் யாகமகவும்
சுடராக எரிந்தால் கடவுளாக நேசித்து -நீ
எல்லோராலும் வணங்கபடுகிறாய்

காட்டுதீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்ததால் -நீ
எல்லோராலும் வெருகபடுகிறாய்

**********************************************************
புன்னகை (குழந்தையின்)
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு

கருவாகி பிறந்த -உன்
புன்னகைககு விலை உண்டோ ?

**********************************************************
வாகிங்கில் (சில வாட்சிங் )
வாகிங்கில் (சில வாட்சிங் )

வீதியில்லே கால்; பதித்து
தெருமுனையில் நடக்கையிலே
அவசர கோபுர தரிசனம் செய்யும்
வாகர்சின் பக்தியும் -அடடா !அடடா

துப்புரவாளர்களின் கூட்டும் பணியும்
வாசலில் கோலமிடும் தெரு -பெண்களின்
சிறு அரட்டைகளும் வம்புகளும்
சிரிப்புடன் கலையும் அவசரமும் -அடடா அடடா!

நாற்பதை கடந்தும் தொப்பை குறைய
ஹீரோவாய் சைக்கிளில் வலம் வரும்
அவசர அவசர மிதிபுகளும்
தெரிந்தவர்களை கண்டதும்
அவஸ்தைப்படும் முகமும் அடடா அடடா!

தெருவோரங்களில் டீக்கடையில்
பேப்பர் படித்துகொண்டு ஊர் கதை பேசும்
பெருசுகளின் பொக்கைவாய் சிரிப்பும் நக்கலும்
தண்ணீர் பிடிக்க அவசரப்பட்டு
சண்டையிடும் கீழ்தட்டு மக்களின் அவசரமும்
சமாதானமும் அடடா அடடா!

ஜோடியாய் நடை பயிலும் தம்பதிகளின்
நீ என்னை மதிபதில்லை என கணவனும்
நீங்கள் என் பேச்சை மதிபதில்லை
என மனைவியின் குற்றசடும்
வீதியிலும் தொடரும் வேதனையும்
விரைவில் விடு திரும்பும் அவசரமும் அடடா அடடா!

ஒண்ட குடிசை இன்றி சாலையின்
ஓரத்தில் தூங்கும் கதியற்றவர்களும்
விடியலில் பெய்த திடீர் மலையால்
தங்க இடமின்றி தத்தளித்து வீடுகளின்
படிகளிலும் கடைகளின் படிகளிலும்
தஞ்சம் புகும் அவசரமும்
பிள்ளைகளின் அழுகுரலோ மனதை பிசைய
பாவமாய் பார்த்து செல்லும்
வகர்சின் அவசரமும் அடடா அடடா!

மார்க்கெட் சென்று திரும்பும் வாக்கர்சின் அவசரமும்
அழகி ஒருத்தி தந்தையுடன் நடக்க
உஸ்ஸு உஸ்ஸு என்ற சதம் -திரும்பி
பார்கையில்லோ நாயை துரத்தும் சாக்கில்

அழகியை திரும்ப வைக்க முயற்சி செய்யும்
சில -எதிர்புற (வாக்கர்ஸ்) இளசுகளின் முயற்சியும்
குறும்பும் பயமும் கலந்த அவசர நடையும் அடடா அடடா !



வித விதமான நாய்களுடன்
அவசரமாய் வங்கிங்கும் அதற்கு
பணித்து போகும் பெரிய மனிதர்களின் பணிவும்
முக்கியமாக( தன்வீடு குழந்தைகளை )
கவனிக்க நேரம் இல்லாத அவர்களின் அவசரமும் அடடா அடடா !

அப்பப்பா தினம் தினம் வாக்கிங்
ஆனால் -கட்சிகளோ மாறுபாடு
சந்தோசம் சந்தோசம் தினம் -பல
மனிதர்களையும் காட்சிகளையும் காணுவதும்
மனதிற்கு ஓரு மாறுதலும் அடடா அடடா

******************************************************************************************************************************

திங்கள், 14 ஜூன், 2010

மழையில் பிடித்த காதல்


சிறு தூரலில் சிரித்த உன் முகமோ
பெரும் மழையால் கலங்கியது -ஏனோ ?
உன் -வீடு மூழ்கிவிடும் என அட்சமோ ?
கலங்கதே பெண்னே காதிருகிறேன்
என் -இதயத்தில் புகுந்த உன்னை
கலங்க விட நான் ஒன்றும் அரக்கனல்ல

மழையில் நீ விட்ட கத்திக்கப்பல்
என் -உளத்தில் மூழ்கி தத்தளிக்கிறதே
அதில் -உன் பெயரும் என் பெயரும்
இல்லாத சோகத்தில்


அடை மழையில் ஒதுங்கிய எனக்கு
திணையில் இடம் தந்த -நீயோ
உன் -அன்பில் திளைத்த எனக்கு
உன் -உளத்தில் இடம் தர மாட்டாயோ பெண்னே !!!!\

(இதை தலை கீழாகவும் படிக்கலாம்)

கீழ் இருந்து மேல் )


*****************************************************


இது கடைசி அல்ல ஆரம்பம்
: இது கடைசி அல்ல ஆரம்பம்

தோழர்கள்
தினம் உன் பாகெட் மணியை
காலி செய்யும் காரணம்
அவர்களும் உன்போல் -என
பந்தாவை காட்டி ஹீரோ
ஆகிவிடும் நப்பாசைதான் -அது
முடியாது என தெரிந்தும்
இது நட்புக்குள் சகஜம்மப்பா
*******************************
உறக்கம்
எல்லோரும் உறங்குவது -உலகை
மறகதான் என்றாலும் -நீயோ
எவளோ உலகம் என்று -அவளை
கணவில் காண உறங்கினால் முடியுமோ?
உன் -உறக்கம் கெடுவது
அவளால் தான் எனும்போது

****************************************
உன்னவள்
அழகானவர்கள் எல்லோரும்
உளம் கவர்ந்தவகர்களும் -இல்லை

அழகு இல்லாதவர்கள் எல்லாம்
மற்றவர்களின் உள்ளதை -கொள்ளை
கொள்ளாமல் இருப்பதும் இல்லை

உன்னவளுக்கு இதயம் என்று -ஒன்று
இருந்ததோ இல்லையோ?
அதில் -நீ இருந்தாயோ இல்லையோ?
கண்டுபிடிக்கவும் முயற்சியுடன்

*************************************
வாலிபம்
வாலிபர்கள் தெருவில் அடிகடி நடந்தால் -அங்கு
அழகான பெண்கள் உண்டு என அர்த்தம்
நண்பனின் வீட்டிற்கு அடிகடி வந்தால்
அது அன்பின் காரணம் என்பதை விட
அவனுக்கு அழகிய தங்கை
உண்டு என்பதால் நடப்பதும்
வருவதும் பாசம் என்பதை விட
பாசாங்கு என அறிக (தங்கை உள்ளவர்கள்)

*************************************************
ithu nanpar covai sathisin kavithaiku eathiraga ealuthiyathu

செவ்வாய், 8 ஜூன், 2010

கண்ணீர்

மழையில் கரையும் கோலங்களும்
பனித்துளியில் அழியும் பூக்களும்
கண்ணீரில் கரையும்
பெண் இனங்களுக்கு ஈடாகுமோ

**********************************************
இது கடைசி அல்ல ஆரம்பம்
: இது கடைசி அல்ல ஆரம்பம்

தோழர்கள்
தினம் உன் பாகெட் மணியை
காலி செய்யும் காரணம்
அவர்களும் உன்போல் -என
பந்தாவை காட்டி ஹீரோ
ஆகிவிடும் நப்பாசைதான் -அது
முடியாது என தெரிந்தும்
இது நட்புக்குள் சகஜம்மப்பா
*******************************
உறக்கம்
எல்லோரும் உறங்குவது -உலகை
மறகதான் என்றாலும் -நீயோ
எவளோ உலகம் என்று -அவளை
கணவில் காண உறங்கினால் முடியுமோ?
உன் -உறக்கம் கெடுவது
அவளால் தான் எனும்போது

****************************************
உன்னவள்
அழகானவர்கள் எல்லோரும்
உளம் கவர்ந்தவகர்களும் -இல்லை

அழகு இல்லாதவர்கள் எல்லாம்
மற்றவர்களின் உள்ளதை -கொள்ளை
கொள்ளாமல் இருப்பதும் இல்லை

உன்னவளுக்கு இதயம் என்று -ஒன்று
இருந்ததோ இல்லையோ?
அதில் -நீ இருந்தாயோ இல்லையோ?
கண்டுபிடிக்கவும் முயற்சியுடன்

*************************************
வாலிபம்
வாலிபர்கள் தெருவில் அடிகடி நடந்தால் -அங்கு
அழகான பெண்கள் உண்டு என அர்த்தம்
நண்பனின் வீட்டிற்கு அடிகடி வந்தால்
அது அன்பின் காரணம் என்பதை விட
அவனுக்கு அழகிய தங்கை
உண்டு என்பதால் நடப்பதும்
வருவதும் பாசம் என்பதை விட
பாசாங்கு என அறிக (தங்கை உள்ளவர்கள்)

*************************************************
ithu nanpar covai sathisin kavithaiku eathiraga ealuthiya
***************************************************************
இதயம்
இதயம்
இதயத்தில் பட்டாம் பூச்சி பறக்கும்
ஆசையாய் சிறகடித்து -இங்கு
உன் -இதயமே பட்டாம் பூச்சிகளாய்
பறப்பது ஏனோ ? எதர்க்கோ ?

************************************************
தீ .........புண்னகை (குழந்தையின் ...... கருப்பு
தீ
தீபமாகவும் கர்பூரமாகவும் யாகமாகவும்
சுடராக நீ எரிந்தால்
கடவுளாக நேசித்து
எல்லோராலும் வணங்கபடுகிறாய் -நீ

காட்டு தீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்தால்
எல்லோராலும் வெறுக்க படுகிறாய் -நீ

**************************************************************

புண்னகை (குழந்தையின் )
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு

கருவாகி பிறந்த -உன்
புன்னகைக்கு விலை உண்டோ ?

********************************************************
*:
கருப்பு

வண்ணங்களில் நீ தெரித்தால்
அலங்கோலம் என்பர்

உன்னில் வண்ணங்கள் தெரித்தால்
அதை அழகு என்பர்

மொத்தத்தில் நீ இன்றி
வண்ணங்களுக்கு அழகு இல்லை
********************************************************* 25 மே நீக்கு latha
மின்னல்

பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????

உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/


********************************************************* தீ .........புண்னகை (குழந்தையின் ...... கருப்பு
தீ
தீபமாகவும் கர்பூரமாகவும் யாகமாகவும்
சுடராக நீ எரிந்தால்
கடவுளாக நேசித்து
எல்லோராலும் வணங்கபடுகிறாய் -நீ

காட்டு தீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்தால்
எல்லோராலும் வெறுக்க படுகிறாய் -நீ

**************************************************************

புண்னகை (குழந்தையின் )
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு

கருவாகி பிறந்த -உன்
புன்னகைக்கு விலை உண்டோ ?

********************************************************
*:
கருப்பு

வண்ணங்களில் நீ தெரித்தால்
அலங்கோலம் என்பர்

உன்னில் வண்ணங்கள் தெரித்தால்
அதை அழகு என்பர்

மொத்தத்தில் நீ இன்றி
வண்ணங்களுக்கு அழகு இல்லை
********************************************************* 25 மே நீக்கு latha
மின்னல்

பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????

உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/


*********************************************************

புதன், 26 மே, 2010

தீ
தீபமாகவும் கர்பூரமாகவும் யாகமாகவும்
சுடராக நீ எரிந்தால்
கடவுளாக நேசித்து
எல்லோராலும் வணங்கபடுகிறாய் -நீ

காட்டு தீயாக கொழுந்துவிட்டு
எரிந்தால் எரித்தால்
எல்லோராலும் வெறுக்க படுகிறாய் -நீ
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு 25 மே (1 நாட்களுக்கு முன்)
latha:
புண்னகை (குழந்தையின் )
உருவாக்கி பூத்த
பூவிற்கு விலை உண்டு

கருவாகி பிறந்த -உன்
புன்னகைக்கு விலை உண்டோ ?
ஸ்க்ராப் செய் ரத்துசெய் நீக்கு 25 மே (1 நாட்களுக்கு முன்)
latha:
கருப்பு
வண்ணங்களில் நீ தெரித்தால்
அலங்கோலம் என்பர்

உன்னில் வண்ணங்கள் தெரித்தால்
அதை அழகு என்பர்

மொத்தத்தில் நீ இன்றி
வண்ணங்களுக்கு அழகு இல்லை

****************************************


மின்னல்
மின்னல்

பூமியை தொட்ட மின்னல்கள்
உண்னை தீண்டவில்லையோ ?????????

உண் -விழியின் பிரகாசத்தில்
வெட்கித்து பூமியில் சேர்ந்ததுவோ ?????????/

**************************************************


நட்பு
நட்பு

நீ theaடும் நபர் இல்லை -என்று
ஓரு வரியில் உன் விரல்கள் சொன்னாலும்
அதை உன் மனம் சொல்லவில்லை -என்று
எனக்கு எப்போதும் புரியும்

நிறம் மாறாத பூவை -போல்
நட்பின் குணம் மாறது
நட்பின் சுவாசத்தை உணர
நீண்ட நாள் காத்திருக்க -நான்

நீயோ ஒற்றை வரியில்
பல நாள் கழித்து வந்து
வண்ணம் மாறும் பட்சோந்தி போல்
நீ தேடும் நபர் நானில்லை -என்று
உன் விரல்கள் சொன்னாலும்

மனம் வருந்தியது முதலில்
பிறகு இதுவும் நன்மைக்கோ என
நட்பில் ஏமாந்தவர்கள் வரிசையில்
நானும் இப்போது நன்றி

********************************

பிரிந்த நட்பும் காதலும்
பிரிந்த நட்பும் காதலும்

பிரிந்த நட்பும்
பிரிந்த காதலும்
பல நாட்களோ
பல வருடங்களோ கழித்து
நமை கடந்து போகையில்
இதயத்தின் எல்லையில்
ஒளிந்திருக்கும் நிணைவுகள்
உணர்வுகளால் உந்தப்பட்டு
இருவரையும் திரும்பி பார்க்க சொல்லும்
அது -நமக்குள் பிரிவு இல்லை
உண்மையான நேசம் என உணர்த்தும்
*******************************

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

காதல் (தத்துவங்கள்)
காதல் (தத்துவங்கள்)


1) மெய் வருத்தி உருகினாலும்
பொய் வருத்தி உருகினாலும்
உண்மை அன்புக்கு மட்டுமே
கட்டுண்டு காத்து கிடப்பது
உண்மை காதல் ..................

2) வெற்றி பெற்றவனுக்கு
காதல் ஓரு மைல் கல்
தோல்வி உற்றவனுக்கு காதல்
ஓரு நிணைவு சரித்திரம் !!!!!!!!!!!!!!!

3) மனம் காற்றாடியாய் அலைந்தாலும்
பறவையாய் இறக்கை கட்டி பறந்தாலும்
கல்லறையே முடிவு என்றாலும்
கால் கடுக்க காத்து கிடப்பது
உண்மை காதல் ..................


4) கல்லடி பட்டு சிதறினாலும்
கண்ணாடியின் எல்லா துண்டுகளிலும்
பிம்பங்கள் பிரதிபலிப்பது போல்
இறப்பின் எல்லை வரை
எந்நிலையிலும் மின்னி மறைவது
உண்மை காதல் ..................

5) கண்ணா மூச்சியாய் காலங்கள் கடந்தாலும்
கடல் ஆழம் போல்
எல்லை காண முடியாது
நினைவலைகளாய் மனதில்
அலைபாய்ந்து ஒளிந்து கொள்வது
உண்மை காதல் ..................



*********************************************************************************************************************************************


அன்பே என் அன்பே

1)வெத்து தாளை கொடுதேன் -எனை
வெறுப்பாய் பார்காதே -நீயும்
தாளினில் பேனாவில் -உன்
பெயரை எழுதும் போது
முனை குத்தி உனக்கு
வலிக்கும் என்பதாலே
என் -இதயத்தில் எழுதி கொண்டு
உனக்கு வெற்று தாளை தந்தேன்
அன்பே என் அன்பே !!!!!!!!!!!!!!

********************************************
2) அன்பு என்ற மூன்று எழுத்தை
காதல் என்ற மூன்று எழுத்தாய்
கடிதம் என்ற நான்கு எழுத்தில்
கட்டிபோட்டு உன்னிடம் கொடுக்க
விருப்பமில்லை எப்போதும் எனக்கு
அன்பே என் அன்பே !!!!!!!!!
*******************************************
3) உன் -பார்வையின் அர்த்தத்தை
மனதில் படம் பிடித்து
இதயத்தில் பூட்டி வைத்து
தொலைக்காமல் காத்திருக்கிறேன்
நீயும் -எனை சிறைபிடித்த பின்
என்னிடம் உன் காதலை சொல்ல
உன் -வாசத்தை காற்றில் சுவாசித்த படி
தினம் நீ எனை கடந்து போகையில்
அன்பே என் அன்பே!!!!!!!!!
*************************************
4) நீ புத்தகமாக இருந்தால்
படித்து இருப்பேன்

ஓவியமாக இருந்தால்
ரசித்து இருப்பேன்

சிற்பமாக இருந்தால்
சிந்தை மயங்கி நின்று இருப்பேன்

அலையாக இருந்தால்
ஓடி பிடித்து விளையாடி இருப்பேன்

காற்றாக இருந்தால்
உன்னுடன் கலந்து
தென்றலாகி இருப்பேன்

மேகமாக இருந்தால்
சந்திரனாய் பிரகாசித்து இருப்பேன்

நீ -உயிராகி போனதாலே
என் -உயிர் துறந்து உன்னுடன்
கலக்க முடியாதே - நீ
என் காதலை உணர
அன்பே என் அன்பே!!!!!!

***********************************************************************************************************************************

திங்கள், 26 ஏப்ரல், 2010

இனியவளே

கிராமத்தான் என்றாலும்
படித்தவன் என மனத்தால் விரும்பி
விவசாயி என்னை மணந்த
படித்த பட்டதாரி மணைவியே
என் -உயிரின் இனியவளே !!!!!!!!!!!!!!!!

பாசமாய் நேசமாய் ஓர் உயிராய் கலந்து
நாம் -வாழ்ந்த இல்லறத்தின்
சந்தோசம் விருட்சமாய்வளர
மணியான முத்து மகனை ஈன்று தந்த
என்- உயிரினும் இனியவளே !!!!!!!!!!

தத்தி தவழ்ந்த மழலையின்
முத்துகளாய் சிதறிய
சிறு வார்த்தைகளில் மயங்கி
மெய் மறந்து ரசித்ததை
என்னிடம் சொல்லி சொல்லி மகிழ்வாயே
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

இன்று -நம் வாழ்கையின் பயணத்தில்
ஏன் -இந்த திடீர் மாற்றமோ ?
உண் -உடன் பிறந்தான் இறந்ததால்
நீ -உண் பிறந்தகத்தில் பெற்றோர்களுடன்
இருகவேண்டிய நிலை ஏனோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!


என் -இரு கண்களுமானா
நீயும் மகனும் எனை பிரிந்து
அங்கு -இருபது அவர்களுக்கு சந்தோசம் என்றாலும்
இங்கு -கண்ணிருந்தும் குருடனாய்
நினைவிருந்தும் பித்தனாய்
நூலறுந்த பட்டம் போல்
உயிர் இருந்தும் ஜடமாய்
வாழும் நிலை எனக்கு ஏனோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

திருமணம் முடிந்ததும்
நாம் கிராமத்தை சுற்றியதும்
தோட்டத்தில் இருவரும்
நிலவை ரசித்தபடி சந்தோசமாய்
பேசிய நாட்கள் மீண்டும் கிடைக்குமோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

குழந்தையுடன் ஓடி பிடித்து
விளையாடி உணவு ஊட்டிய
குதூகலமும் உற்சாகமும்
இனி எப்போது கிடைக்குமோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

தனித்து பித்தனாகி இங்கு
உங்கள் நினைவுகளுடன் -தோட்டத்தில்
மரங்களுடனும் செடிகளுடன்னும்
பேசி கொண்டு இருக்கிறேன் நீங்கள்
என்னுடன் இருப்பதாக நிணைத்து
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!


என் -நிலை உணர்ந்து நீ
சிந்தித்து முடிவு செய்து
இங்குவர காத்திருக்கிறேன்

**********************************************************************************************************************************************


திருமண வாழ்த்து

புலி கொடி பறக்கும்
வீர மா நகரம்
பெரிய கோவிலை பெற்று
பெருமையுடன் விளங்கும் தஞ்சை
மாநகரிலே நடக்கும்
பத்மவள்ளி -கௌதமன்
தம்பதியருக்கு திருமண வாழ்த்து
மணநாள் 19-05-2010



பல மனங்கள் இணைந்து
முடிவுசெய்து முடிசுபோட்டு
இருமனங்கள் கலந்திட
நல் -மனங்கள் வாழ்த்திட
நடத்திடும் ஓர் இனிய விழா
திருமணம் திருமணம்

நீவீர் இருவரும்
அன்பை பரிமாறி
இரு மனங்களும் ஓரு மனமாகி
இல்லறமெனும் நல்லறம் நடத்தி
குலம் விளங்க நாடு விளங்க
நல் மக்களை பெற்று
நாடும் வீடும் போற்ற
சீராட்டி பாராட்டி
சிறப்புடன் வளர்த்து
நல்ல தமிழ் மகனாக
நாடு போட்ரும் வீர மகனாக வளர்த்து

இல்லறத்தின் இனிமையை
இளமை முடியும் முதுமையிலும்
சந்தோசமாய் வாழ்ந்து
சரித்திரம் படைக்க
மனமார வாழ்க வாழ்க -என
வாழ்த்தும் உங்கள் தோழமை

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

திருமணம் ( குட்டி கவிதைகள் பத்து )

பல மனங்கள்
முடிவு செய்து
இரு -மனங்களை
இணைப்பது திருமணம்
************************************
விவாகரத்து

இரு -மனங்கள் முடிவு செய்து
பல -மணங்களை
நோகடித்து பிரிவது விவாகரத்து

***********************************************
அழகு
பின்னாளில் உரு குலைந்து -போனாலும்
முன்னாளில் அல்லைய வைப்பது -அழகு

*************************************************
அன்பு
இறந்து போனாலும்
அனைவரையும் மனம்
உருகி அழவைப்பது -அன்பு


(2) என்றோ நீர மறந்து -போனாலும்
இன்றும் என்னை அழவைப்பது
உம் -உண்மை அன்பு
**********************************
உயிர்
காற்றில் கரைந்தாலும்
கண்ணீரில் மறைந்தாலும்
அன்பே என் -நிணைவுகள் உனக்கும்
உண் -நிணைவுகள் எனக்கும்
என்றும் -உயிர் என்று
அந்த காலனுக்கு (எமன் ) தெரியுமோ ?

****************************************

குழந்தைகள்
முன்னாளில் நமக்கு -நிழல்
பின்னலில் நாம்
அவர்களுக்கு நிழல்
******************************************

பரம்பரைகள்

நம் -வாழ்க்கை சுவடை
வாரிசுகள் வழியாக
வழி வழியாய் வாழ்ந்து
காட்டும் நாடக கூட்டங்கள்
பரம்பரைகள்
**************************
நிழல்
நிணைவில் தேங்கிய
நிஜங்களின் மறைப்பு -நிழல்
****************************************
புருஷன்
பிடிக்காத மணைவி என்றால்
அவளுடன் பேசமாடான்
சண்டை போடா கூட -எப்போதும்

பிடித்த மணைவி என்றால்
அவளுக்கு இவனை பிடிக்கா விட்டாலும்
கனவிலும் கூட பேசுவான்
அவளுடன் எப்போதும்
********************

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

மணியன் மணிஸ் (பால சுப்பிமணியம் )

சங்கம் வளர்த்த மதுரையில்
மீனாட்சி அம்மைக்கும்
நாகையா அவர்களுக்கும் -ஐந்தில்
ஓரு மகவாய் பிறந்து
பால சுபிரமணியம் என நாமம் சூடி
முடிசூடா மன்னனாய் வளர்ந்து
மணி மணியை வார்த்தை பேச
பெரியாரின் வழி வந்த பேரனே !!!!!!!!!!!!௧

உண் -நெஞ்சமோ குமுறுகிறது
தமிழ் ஈழ மக்களுக்காக
உண் -சிந்தனையும் நிந்தனையும்
அவர்களுக்கே என்று வாழ்கின்றாய் -எப்போதும்

குடும்பம் எனும் பந்தத்தை பற்றி கொண்டால்
போராடும் மனம் பறிபோய் விடுமோ ????????????????/
சுயநலமாய் வாழும் நிலை
வந்திடுமோ என்று
வீம்பாக இருகின்றாய் தனித்து !!!!!!!!!

நினைத்ததை சாதிக்க
ஈழ மகளுக்கு வழி தேடி தந்திடவே
உன் -சிரம் தாழ்த்தி அழைகின்றாய்
ஈர மனம் கொண்ட அன்பு உள்ளங்களை

உன் எண்ணம் ஈடேர
லட்சியத்தில் ஜெய்திட
தலை போனாலும் ஈன பிறவிகளுக்கு
தலை தாழ்தாததுதான் தான்
உன் அஞ்சாமை எனும் குணம்



**************************************************

உறவுகள்

அண்ணன் தம்பி உறவு
என்பது அடித்து கொள்ளத்தான்

அக்கா தங்கை உறவு
என்பது அழுது புலம்பத்தான்

அம்மா அப்பா பிழைகள் உறவு
என்பது கலந்து வாழத்தான்

கணவன் மணைவி உறவு
என்பது காலம் தள்ளத்தான்

நட்பு எனும் உறவு
என்பது நம்மை அறியத்தான்

*******************************************

கல்லூரி நாட்கள்

கிராமத்திலே பிறந்து
பள்ளி பருவமதில்
பாடங்களை முடித்து

பட்டபடிப்பை படித்திடவே
ஆகாயத்தில் பறக்க ஆசை பட்டு
இளங்காளை நானோ
கல்லூரியில் அடிவைத்து

வண்ணத்து பூட்சிகள் நடுவே
பட்டாம் பூச்சியாய் சிறகடித்து
பறந்தோமே நானும் நண்பர்களும்

பாடங்களை படித்தோமோ இல்லையோ
எல்லா படங்களையும் பார்போமே

பீயூடிகளை பார்த்து
லூட்டிகள் அடித்ததும்

உடன்படித்த தோழிகளின் முன்னே
நாகரீகமாக நடந்தாலும்
அவர்களின் பின்னோ அடித்த
நக்கலும் நையாண்டியும் எங்கோ ?

புரபசர்களை புரட்டி போட்ட
நாட்கள் எங்கோ ?
கல்லூரியில் இருக்கும் மரங்களில் சாய்ந்து
காதலிக்கு கடிதம் எழுதிய
நாட்கள் எங்கோ ?

நானும் கம்பனாகி கவி புணைந்து
புவனியிடன் கொடுத்து -என்
சந்தோசங்களை தொலைத்த நாட்கள் எங்கோ ?

அன்பே-என் உடல்மட்டும்
தனித்து இங்கு-என்
உயிரோ உன்னுடன் கலந்துவிட்டது
உயிர் இல்லா இவ் உடலோ
உண் நிணைவால் ஜடமாய்
சுற்றுகிறது றன்று -நான்
புணைந்த கவிதையில் மயங்கி

உடல் வேறு என்றாலும்
உயிர் ஒன்றாக கலந்தபின்
இனி சேர்ந்தே உணவு உண்போம் என்று
தினம் எனக்கு மொய்வைத்து
என்னை போண்டி ஆகி என்னிடம்
பணம் இல்லை என்று ஓரு முறை சொன்னதும்
படவா நீ வேஸ்ட் என்று
என்னை தூக்கி எறிந்து விட்டு
நீ -போன பின் நான் தாடியுடன்
படிப்பை முடித்த அந்த சோக நாட்கள் எங்கோ ?

படிப்பை முடித்து ஆகாயத்தில் பறக்கும்
வேலை கிடைத்து நான்
சந்தோஷத்தில் பறந்தாலும்


சந்தோசங்களும் நிணைவுகளும்
கானல் நீராய் இருந்தாலும்
இனி அந்த கல்லூரி நாட்கள்
எனக்கு திரும்ப கிடைக்காதே
***********************************************

திங்கள், 29 மார்ச், 2010

நான் செத்து போனேனடி பெண்ணே

கால்கடுக்க காத்திருந்து
தவமாய் தவமிருந்து
உண் -புன்னகையை எதிர் கொண்டேன்
ஆறு மாதம் கழித்து !!!!!!!!!!!!!!

எட்டி நின்று நீ சிரிப்பதை
பார்த்து பார்த்து ரசிதேன்
இரண்டு மாதம் கழித்து !!!!!!!!!!!!

நான் பேசவோ நீ பேசவோ -என்று
காத்திருந்தேன் இரண்டு மாதம் ????????????

மெல்ல மெல்ல அடிவைத்து
என் -அருகே வந்தாய்
இன்னும் -இரண்டுமாதம் கழித்து !!!!!!!!!!!

புல்லரித்து போய் மெய்சிலிர்த்து
நின்றேன் சந்தோஷத்தில் -நான் !!!!!!!!

என் -ஒருவருட தவத்திற்கு
பலன் கிடைத்தது என்று
நீயோ -ஓரு கடிதத்தை கொடுத்து
தினம் உன்னுடன் வரும்
உன் -நண்பனுக்கு இது
கொடுத்து விடு அண்ணா என்றாய் ???????????

கடைசிவரை உண்னை பார்க்கும் சந்தோஷத்தில்
ஒருவருடம் எப்போதும் என்னுடன் -ஓரு
நண்பன் இருந்தான் என்பதை
மறந்து போனதாலோ எனக்கு
இந்நிலையோ உனக்கு அண்ணனாக மாற ???????????????

செத்து போனேனடி பெண்ணே
நான் செத்து போனேனடி பெண்ணே



விண்ணுக்குள் மண்ணுக்குள்

உன் -புன்னகையில்
முத்து பல் வரிசை கண்டு
நட்சத்திரங்களும் வெட்கத்தால்
ஒளிந்து கொண்டனவோ விண்ணுக்குள் !!!!!!!!!!!

ஜொலிகின்ற உன் முகம் கண்டு
இன்னொரு நிலவு எப்படி வந்ததென்று
நிலவும் ஒளிந்து கொண்டதோ விண்ணுக்குள் !!!!!!!!!!!!

மண்ணுக்குள்
உன் -உருவம் பூமியில் இருக்க
என் -நினைவை தாங்கிய
உன் -நிழலோ மண்ணுக்குள்ளோ ???????????????

உன் -நித்திரையின் போதோ
என் -நினைவே உன் நெஞ்சுக்குள்
அலைபாயும் உன் நினைவோ
கண்ணீராய் மண்ணுக்குள்ளோ ????????????????

காதலிக்கும் இந்த நிமிடம் வரை
நம்- காதல் உண்மை என்பது சத்தியவாக்கு
நாம் -ஒன்றாக சேர்கிறோமோ -இல்லை
பிரிகிரோமோ யாருக்கு தெரியும் ????????
விண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமே
தெரிந்த ரகசியம் -இது

கவலைபடாதே நாம் பிரிந்தாலும்
பாதகம் இல்லை இருவருக்கும்
ஏன் என்றால் இது
விண்ணுக்கும் மண்ணுக்கும் மட்டுமே தெரியும் என்பதால்
டேக் இட் ஈசி பெண்னே


காந்தி (அடி)கள்
காந்தி (அடி)கள்

காந்திக்கு அடிகள் பல
சுதந்திரம் பெற்றுதந்தவர்களிடம்
அவருக்கு மரியாதையை என்று
பல முறைகளில்

பணத்தில் அச்சிட்டு
எசில் தொட்டு எண்ணுவதால்
தபால் தலையாக போட்டு
முத்திரை என்று (அடி)

சிலை வைக்கிறோம் என்று
பறவைகளுக்கு எச்சமிடும்
கழிப்பிடம் ஆகுவதால் -அடி

சுததிரம்பெற்று தந்தவரை
வழிதோன்றல்கள் அறிய
புத்தகத்தில் போடுதலென்று
அச்சு (அடி)தல் என்று



முத்தம்

உன் தோள் பற்றி -நான்
உன் -நெற்றியில் பதித்த முத்தமோ
என் -அன்பின் மழையடா கண்னே

நீ-என் கழுத்தில் உன்
கைகளை மாலையாக்கி
என் -கன்னத்தில் பதித்த முத்தமோ
ஆழிப் பேர்அலையட -என்
செல்ல பேறான்டியே
உன் முத்தம் எனக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!

ஞாயிறு, 21 மார்ச், 2010

ஜில்லென்ற மனதிலே
ஜில்லென்ற மனதிலே

ஜில்லென்ற மனதிலே
கொல்லென்ற சிரிப்புடன்
நீ- மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

ஜல் ஜல் எனும் சலங்கை ஒலியினால்
என் -மனதை சல்லடையாய் சிதைத்து
நீ- மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

அன்பென்ற பாச மழையிலே
அலைகடலாய் என் உயிரை
நீ-அடித்து - மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

உன் -பார்வை பேசும் மொழியினால்
என் -உணர்வுகளை கொன்று
நீ -உன்னுடன் எடுத்தது மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

கனவென்ற நிழலில் இப்படி
உணர்விழந்து ஜடமாய்
உன் -நிணைவாய் இருக்கா நானும்
நீ - எனை மறந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

விழிப்பு என்று வந்தால்
பார்க்கும் பொருளில் எல்லாம்
நீ -வந்து மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

எதை பார்த்து நின்றாலும்
உன் முகம் என சிரிப்பதாலே
எனை பித்தன் என சொல்கின்றனர்

பலர் எனை பார்த்து கொல்என சிரித்தாலும்
அப்படி -சிரிக்கின்ற பிம்பம்மெலாம்
என் -மனதில் ஜில்லென்று தோன்றி
நீ -என மாறி மறைந்து போனதேனோ !!!!!!!!!!!!!!!!

( இதை பாட்டாகவும் படிக்கலாம் )





கொக்கர கொக்கரக்கோ சேவலே

வீட்டு கூரையின் மேலே
வீராப்பாய் நான் அமர்ந்து
கொக்கரக்கோ என கூவையிலே

பொழுதும் புலர்ந்ததென
ஊரும் விழிததப்பா
திமிராய் நான் இறங்கி
வீதி உலா நடந்து வந்தேன்

என் -வீட்டு உறவு ஒன்று
உள்ளே போக கண்டேன்
பின் தொடர்ந்து நானும் சென்று
அவரை சுற்றி ஓடிவந்தேன்

அவர் கண்களோ எனை நோக்க
வாயோ கோழி யாருது என விழிக்க
நம்ம ஊட்டுதுதான் என
அம்மாயி சொல்ல கேட்டேன்

எனக்கு இறையோடு அவள் வந்து
அன்போடு அணைத்து சென்றால் எனை
ஆசையாய் நானும் பம்ம

பாவி அவள் அரிவாளால்
என் -தலையை கொய்தாளே
முழியன் அவள் தம்பிக்கு
ஆசையாய் எனை விருந்து சமைக்க

எல்லோருக்கும் பொழுது விடிவதை
தினமும் கூவி அறிவித்த எனக்கு
இனி -பொழுதே விடியாது
என்று தெரியாமை போச்சே

வீட்டு கூரையின் மேலே
வீராப்பாய் நான் அமர்ந்து
கொக்கரக்கோ என கூவையிலே

பொழுதும் புலர்ந்ததென
ஊரும் விழிததப்பா
திமிராய் நான் இறங்கி
வீதி உலா நடந்து வந்தேன்

என் -வீட்டு உறவு ஒன்று
உள்ளே போக கண்டேன்
பின் தொடர்ந்து நானும் சென்று
அவரை சுற்றி ஓடிவந்தேன்

அவர் கண்களோ எனை நோக்க
வாயோ கோழி யாருது என விழிக்க
நம்ம ஊட்டுதுதான் என
அம்மாயி சொல்ல கேட்டேன்

எனக்கு இறையோடு அவள் வந்து
அன்போடு அணைத்து சென்றால் எனை
ஆசையாய் நானும் பம்ம

பாவி அவள் அரிவாளால்
என் -தலையை கொய்தாளே
முழியன் அவள் தம்பிக்கு
ஆசையாய் எனை விருந்து சமைக்க

எல்லோருக்கும் பொழுது விடிவதை
தினமும் கூவி அறிவித்த எனக்கு
இனி -பொழுதே விடியாது
என்று தெரியாமை போச்சே !!!!!!!!!!!!!!!!!!!!

வியாழன், 18 மார்ச், 2010

ஆடம்பரம்

எட்டி நடை போட்டு நடந்த காலம்
மலைஏறி போயாச்சி
காசிருந்தும் பணமிருந்தும்
கால்நடை பயணத்தால்
காசு மிட்சம் எணும் காலம் போச்சி
இதனாலோ மனிதர்களுக்கு
உடல் ஆரோக்கியம் போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்

இப்போதோ எட்டிலே ஏறி பறக்க
இருசக்கர வாகனம் என்று மாறி போச்சி
மாடு பூட்டிய வில் வண்டியும்
குதிரை வண்டியும் மறந்து போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்

மாலையும் தாலியும் மேளமும்
அட்சகரும் உறவுகளும் கோவிலும் -இருந்தால்
திருமணம் எனும் நிலை மாறி போச்சி
கப்பலிலும் வீமானதிலும் புகைவண்டியிலும்
திருமணங்கள் என மாறி போச்சி
ஆடம்பரம் எனும் கவர்சியால்



கல்வியா செல்வமா வீரமா

கல்வி இருந்திட்டால்
செல்வமும் வீரமும்
கிடைத்திடும் என்பது பழங்கதை

இன்றோ -செல்வம் இருந்தால்தான்
கல்வி கிடைக்கும் நிலை
அக்கல்வியினாலே செல்வம்
கிடைத்திடும் நிலை இன்று
இங்கு வீரத்திற்கு என்ன வேலையோ ?

ஓரு வேளை விரும்பிட்ட இடங்களில்
கல்விக்கு காசு குடுத்து
இடம் வாங்குவது வீரமோ !
ஓஒ செல்வம் இருந்தால்
கல்வியும் வீரமும் கிடைக்குமோ



நெட் பிறந்தநாள் கொண்டாட்டம்

மனமில்லா மனிதர்களும் சரி
பணமில்ல மனிதர்களும் சரி
மனதார வாரி வழங்குகின்றனர்
தம -பிறந்தநாள் கேக்கையும்
மிட்டாய்களையும் ஆர்குட்டில் நண்பர்களுக்கு

பொம்மையாக வெரும்தாளில்
வாய்க்கும்எட்டாது கைக்கும் எட்டாது
கண்ணாலே சாபிடனுமோ
இதுதான் நெட்டில் பிறந்தநாள் கொண்டாட்டமோ



இதழே
இதழே

ஆசையுடன் உன்னை கடிதத்தாலே
உண் -பட்டு இதழ் கிழிந்ததோ
சாரி என் செல்லமே

உன்னை முகர்ந்ததாலே
வாசம் என்னை மயக்குகிறதே
அதனால் -நீ கலைந்து விட்டாயோ
சாரி என் செல்லமே

நான் கடித்தால் கொஞ்சம்
கசகிறதே உண் இதழும்
பார்க்கத்தான் நீ அழகு
சுவையோ குறைவுதான்
கோபிககாதே நீயும் என்னை
இதழே என் ரோஜா இதழே
சாரி என் செல்லமே


( இது ரோஜா இதழை பற்றி ஓரு சிறுமி சொல்லுவது )
வீட்டுக்கு பொண்ண தலையில் குட்டு விழும் ஓரு பூவை ஒழுங்கா



குண்டு மல்லி

கெத்தாக இருக்கின்றாய்
கொத்தாக பூகின்றாய்
உண் -வாசனையோ ஊர் தூக்கும்
வாடிவிட்டால் நாரிடுவாய்
குப்பையிலே நீ விழுவாய்
பூவே குண்டுமல்லி பூவே

*************************************************************************

சாமந்தி

சாமிக்கும் மாலை ஆவாய்
சம்பந்திக்கும் மாலை ஆவாய்
சவதிற்கும் மாலை ஆவாய்
வாசனையோ உனக்கு கம்மிதான்
சாமந்தி பூவே நீ சராசரி பூதான்
**********************************************************

ஜாதி மல்லி

குட்சி குட்சியாய் நீண்டிருபாய் -நீயோ
குசியுடனே வைப்பார் உண்னை
ஆசையுடன் உண் வாசனையில் மயங்கி
ஆனால் உனக்கு ஆயுளோ அரை நாள்தான்
ஜாதி மல்லி என்று எதற்கு
உண் பெயரோ புரியலையே

**********************************************************

ராம பானம்

ராமனோ காட்டில்
பானமோ போரில்
நீயோ கொடியில்

எட்டூருக்கு மனம் பரப்பி
எங்கிருந்தோ தேட செய்வாய்
அருகில் எட்டி பார்கையிலே
பறந்து செல்லும் மனம் தருவாய்

ராம பாண பூஎன்றால்
குறிவைத்து மனம் கொட்டினால்
ellorum மயங்குவர் என்றோ
ராம பாண பூ என்று உண் பெயரோ

***************************************************

வெள்ளி, 12 மார்ச், 2010

அவன் உண்னை மூணு பொருள் நண்பர்கள் நீ
அவன்

பகலெல்லாம் காட்டமாய்
ஏமாளி மக்களை
சுட்டெரிகதான் தெரியும்
அந்த சூரியனுக்கு ?

இரவில் முக்காடிட்டு -பலர்
செய்யும் ஈழிநிலை செயல்களுக்கு
துணை போகத்தான் -இரவில்
வருவதிலையோ அந்த சூரியன்
துஷ்டன் துஷ்டன் -அவன்
*******************************
உண்னை

உண்னை நிணைத்து -நான்
எழுதிய அன்பு வரிகளோ
பக்கம் பக்கமாய் போகிறதே
என் -வீட்டு குப்பை தொட்டிக்கு
உன்னை -காணும் ஓவ்வொரு முறையும்


அதை - உன்னிடம் தரும் தைரியம்
என்னிடம் இல்லை என்பதால்
காரணம் கத்தியுடன் -எப்போதும்
திரியும் உண் ரௌடி உடன பிறப்புகள்
என்னசெய்ய ? ?என்ன செய்ய ?
***********************************************

மூணு பொருள்
மூனுபொருள் பத்து ரூபாய்
எது எடுத்தாலும் -என்று
மூலைக்கு மூலை கூவியவர்களோ
வண்டியை பார்த்ததும் அலறினார்கள்

எங்க போனாலும் விடமாடான்களோ
மாமூல் கிறாகி மாமன்கள்
இந்த போலீச்கார களவாணிகள் என்று

*********************************************************

நீ
தன் -அன்பில் மூழ்கடித்து
உண்னை தம் வசமாகி
உருபடியாகி மனிதனாக்க
முயல்கிறது நண்பர்கள்
வட்டம் ஒன்று ஆனால்

நீயோ -நல்லவனாக நடித்து
உண் -பணத்தை வீசி
எத்தனையோ (மான் குட்டிகளை ) பெண்களை
மடக்க முயல்கிறாய்



ஆனால் ஒருத்தி மட்டும் -உண்னை
விதி விலக்காய் ஏற்று கொண்டாள்;
தன் அண்ணனாக -உண்னை
உண் -நண்பனின் காதலி என்றும்
நீ அண்ணனாக இருந்து
திருமணம் செய்துவை என்று

என்ன செய்ய என்னசெயா ?

(நண்பர்கள் கோவை சதீஸின் கவிதைக்கு எதிராக எழுதியது


பேனா
உன்னை இரு விரலில் அடக்கி
தன்வசம் ஆக்கலாம் எழுதவோ

நீயோ உண்னுள் இருக்கும்
ஓரு துளி மையால்
எழுதப்படும் எழுதுக்களால்
உலகத்தையே உன் வசமாகுகிறாயே


விளம்பரம்

விற்காதப் பொருள்களும்
விலைப்போக உதவுகின்றாய்
கவர்ச்சி என்னும் போர்வை போர்த்தி

வியாழன், 11 மார்ச், 2010

33% மசோதா சட்டம் எதுக்கோ?

வழிமேல் விழிவைத்து
கவவனுகாக காத்திருப்பது
பண்டை தொட்டு
பழகமாகி வந்ததுவே

தாமதித்து வரும்
சோத கணவர்கள்
திருந்தி விடுவார்களோ ?

காத்திருக்க வேண்டிய
காலம்தான் மாறிவிடுமோ ?
33% சதம் மசோதாவால்

முதல் வேண்டுகோளாக
காக வைக்கும் கணவர்களுக்கு
தண்டனை கொடுக்கும்
சட்டம் வரட்டும்
இதை பற்றி சந்தோசிகலாம்


தினம் காத்து கொண்டு இருக்கும் பெண்களின் குமுறல்))
மன்னையின் கவிதைக்கு பதில் இது



பயம் (பயமாய் )

பயமாய் காவலருக்கு பயந்து
மாதா கோவிலின் இருட்டில்
ஒளிந்திருக்கும் திருடர்களின்

கண்களில் பட்ட வாசகம்
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
என்ற வாசகம் இது எப்படி இருக்கு ?

தினம் காத்து கொண்டு இருக்கும் பெண்களின் குமுறல்))
மன்னையின் கவிதைக்கு பதில் இ


/ மழை /ஆனந்த தாண்டவம் /நந்தவனம்/பக்தி
தீ

நெருப்பு புட்டியில் உரசியதும்
பற்றுவது குட்சியில் -தீ

உண் -பார்வை உரசியதும்
பற்றுவது என் நெஞ்சில் -தீ


மழை

மழைத்துளி பட்டதும்
சில்லிடுகிறது பூமி

உன் -இதழோரத்தில் புன்னகையை
கண்டதும் சில்லிடுகிறது
என் -மனமோ எப்போதும்


ஆனந்த தாண்டவம்

மேடையில் ஆடுவதோ
ஆனந்த தாண்டவம்

நீ -அசைந்து செல்கையிலே
ஆடுகிறதே என் -இதயம்
ஆனந்த தாண்டவத்தால்



நந்தவனம்

நந்தவனத்தில் வீசுவதோ
பூக்களின் மணம்

என் -மனதில் வீசுவதோ
உன் அன்பின் மனம்



பக்தி

ஆலயத்தில் மணியோசை கேட்டதுமே
பக்தியுடன் புறபட்டேன்
மீனாட்சி உண்னை தரிசிக்க

நிட்சயம் நீ தினம்வருவாய்
அம்மன் மீனாட்சியை தரிசிக்க -என்று

திங்கள், 8 மார்ச், 2010

மகளிர் தினம்


மகளாய் பிறந்து
மணைவியாய் வாழ்ந்து
மகளை ஈன்றாலோ
பெட்டையைதான் பெற்றாயோ
என -ஏசும் நிலை மாறிவிட்டதோ ?

நிறமில்லை பணமில்லை
நல்ல குணமிருந்தால் -போதும்
இல்வாழ்க்கையை நிறைவு செய்ய
நாங்கள் வாழ்வு தருகிறோம் -என
மாபிளைகளும் வீட்டாரும்
மனமார ஏற்று கொள்ளும்
நிலையான நிலை வந்து விட்டதோ ?

வறுமைகாகவும் வயிற்றுபசிக்காகவும்
உடல் வருத்தி செய்ய -எத்தனையோ
வேலைகள் இருந்தும்
உடலை விற்று சோறு தின்னும்
நிலை மாறிவிட்டதோ ?


விபச்சாரிகளும் விபச்சாரங்களும்
இலாத நாடு எதுவோ? -உலகத்தில்
விபச்சாரம் இல்லாத உலகமாக
மாறும் போது கொண்டாடலாமே
என் நிலையிலும் பெண்கள்
உயர்ந்தவர்கள் எனும் நிலையில்


பெண்களுக்கு இளைகபடும்
சாதாரண அநீதிகளுக்கு கூட
இன்னும் -சரியான ஒத்துழைப்பு
கிடைக்காத போது நீங்காதபோது

எந்த எல்லைகளை தொட்டு
வெற்றி கொடியை நாட்டிவிட்டதர்காக
இந்த தினம் கொண்டாட படுகிறது?

இப்படி ஓரு நாள் கொண்டாட படுவது -கூட
தெரியாது செக்கு மாடாய் உழைகும்
பெண்கள் எதனை ஆயிரங்களோ ?

வாழ்க மகளிர்தினம்



சூரியனே
சூரியனே
ஓ ஓ ஓ இயற்கையின் அழகிய
அந்தி சாயும் நேர்ரத்தில்
மின்னி மறையும் சூரியனே
இருண்ட மேகங்களுக்கு -இடையில்
தங்க தட்டாய் ஜொலிக்கிறாயே
உண் -அழகை என்னவென்று சொல்லுவதோ



நீ ,நான் . அவன்
நீ ,நான் . அவன்
நிலவு நீ என்றால்
மேகம் நான் அல்லவோ '
உனக்கென்ன வெட்கம்
எப்போதும் என்னுள்
ஒளிந்து ஒளிந்து
விளையாடுகிறாய் நீயோ ?

பார்ப்போர் எல்லாம் -நான்
உண்னை மறைத்து விளையாடுவதாக
எண்ணி ஏசுகின்றனர் -எப்போதும்

எல்லோருக்கும் தெரிவதில்லை
என்னுள் தோன்றுவதாலே -நீ
அழகாய் தெரிகிறாய் என்று

நீ என்னுள் தோன்றும்போது
எதனை ஆனந்தம் எனக்கு
உண் -குளிர்ந்த வட்டம்
என் -வாட்டத்தை போக்கிவிடும் என்பதால்

அதே சூரியன் என்னுள்
தோன்றும்போது எனக்கு
எதனை வேதனை தெரியுமா /?

எல்லோரும் தன்னாலே
ஒளியாய் பிரகாசிகின்றனர்
என்ற கர்வத்தால் எனக்கு
சூடு வைப்பானே மாலை
தான் மறையும் வரை

அவனது சூடை தங்காது
மழையாய் கண்ணீரை
கொட்டுகிறேன் நானும்
அதற்கும் சந்தோசிகின்றன
எல்லா ஜீவராசிகளும்

நீ வராத அந்த
அமாவாசை மட்டும் எனக்கு
ஓரு யுகமாய் கழிகிறது
விடியும் வரை
நீ தோன்றிய பின்தான் -நான் -
நானாகி சிரிக்கிறேன் தோழியே

செவ்வாய், 2 மார்ச், 2010

செல்வி என்கின்ற ஷீலாவிர்ற்கு (கண்ணீர் அஞ்சலி )

எங்கோ பிறந்தோம் .
எப்படியோ வளர்ந்தோம்
இங்கு ஆர்குட்டில் நட்பும் ஆனோம்

நல்ல தோழியாக இருந்தாய்
என் -நிலை குறித்து
அன்பாய் ஆறுதல் சொல்லுவாய்
ஓர் உயிராய் பிறந்து விட்டால்
வாழ்ந்துதான் ஆகாவேண்டும் என்று
எப்போதும் நம்பிக்கை கொடுத்திடுவாய்

உனக்கும் ஓரு சோதனை வந்தது
ஆம் -காதல் என்ற மாயையில்
மனதை ஒருவனிடம் பறிகொடுதாய்

அவன் உண்னை ஏற்க மறுத்ததும்
மனம் உடைந்து போனாயே
அப்போது உனக்கு நான் ஆறுதல்
சொல்லி உன்னை தேற்றினேன்

மனம் தெளிந்து நீயும்
வாழ்ந்த போது இன் நிலை
உனக்கு ஏன் வந்ததோ

இருசக்கர வாகனத்தில்
சென்றபோது விபத்து ஏற்பட்டு
அங்கேயே நீ இறந்து விட்டாய்
என அறிந்ததும் மனம் நொந்து போனேனே

என்மீது எனகே வெறுப்பும் வந்ததே
உண்னை ஓடி வந்து பார்த்திடலாம் என்றாலோ
இறைவன்தான் என் காலை
நடக்க முடியாது செய்து விட்டானே

நீ இறந்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆனாலும்
உன்னுடன் இங்கு ஆர்குட்டில்
இப்போதும் பேசுகிறேன் தணியா

அடுத்த ஜென்மம் என்று
நம் இருவருக்கும் இருந்தால்
நீ என்னக்கு தாங்கியாக
பிறக்க வேண்டும் தோழியே

இனி தினமும் நான்
இறைவனிடம் வேண்டும்
வரமும் இதுதான் தோழியே இதுதான்
காத்திருப்பேன் உம் அழைபேசி அழைபிர்காக

அயல்நாட்டில் அயர்ந்து உறங்கும் -அன்பரே
இங்கு -பொழுது புலர்ந்து
விடிவெள்ளியும் முளைத்துவிட்டது
முகம் பார்க்க முடியாத பிரிவோ -நமக்கு
என்று -பிறக்குமோ நம் வாழ்வில் விடிவெள்ளி

நீர் -ஓரு நாட்டிலும்
நான் இங்கும் அல்லல்படும்
அவலமும் என்று தீருமோ ?
உறக்கம் என்பது நம்மை -மீறி
நம்மை தீண்டும் போது
நீர் என்னுடன் கனவிலும்
நான் உம்முடன் கனவிலும்
குடும்பம் நடத்தும் குறைதீரும்
நாள் என்று வருமோ ?

குடும்பத்திற்காக பொருள் தேட -நீர்
அயல்நாடு சென்றாலும்
குடும்பமாக இல்லாது -இங்கு
நான் தவிக்கும் தவிப்பை அறிவீரோ ?

இந்த ஓரு நல்ல நாளும் -நீர்
இன்றி எனக்கு சிறப்பில்லை
எபோது இங்கு வருவீரோ
என்னுடன் சேர்ந்து இல்லறம் நடதுவீரோ /?

மனம் முடிந்த ஆறு மாதத்தில்
ஓரு வருடத்தில் வருகிறேன் -என்று
என்னை பிரிந்து சென்ட்ரீறே
வருடம் இரண்டு ஓடிவிட்டதே
என் -முகம் உம் மனதில்
நிழலாக மாறும் முன்
இங்கு வந்து விடுங்கள் அன்பரே

அந்த ஆறு மாதத்தில் -நான்
உம்முடன் பகிர்ந்து கொண்ட
சந்தோசங்களையும் இன்பங்களையுமே
இப்போதும் வாழ்க்கையாக எண்ணி
வாழ்ந்து வருகிறேன் கணவுகளுடன்

போதுமென்ற மனமே பொன் செய்யும்
பொருத்தது போதுமென்று
என் -மனம் இடித்துறைகிறது
உடனே வந்து விடுங்கள் அன்பரே
பொருள் தேடும் நோக்கை
நம் -நாட்டிலே செய்து கொள்வீராம்

இன்று நம் திருமண நாள்
இனிதே கொண்டாட வேண்டிய நாள்
நலம் விசாரிக்க முடியாது
நீர் உறங்கும் நேரமிது
நீர் விழித்ததும் என் போல்
இன் நாளை உணர்வீரோ தாமாக ?
என்னுடன் அலைபேசியில்
பேசி பேசி மகிழ்வீரோ ?
தெரியவில்லை எனக்கு

எனை மறந்து நான் உறங்கும்வரை
காத்திருப்பேன் கண்ணயராமல்
உம் அலைபேசியின் அழைபிர்க்காக

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

யாரை நானும் குற்றம் சொல்ல ?

என் -மனதை நீ ....
அறிந்து கொள்ள -நான் ..
புத்தகமும் அல்ல ..

என் *-நினைவுகளை நீ ..
தெரிந்து கொள்ள -நான் ..
நாவலும் அல்ல ..

என் -குணங்களை நீ ..
புரிந்து கொள்ள -நான் ..
புதுமை பெண்ணும் அல்ல ....

என் -புண்ணகையின் அர்த்தத்தை நீ ...
புரிந்து கொள்ள நான் ..
புதுமை பூவும் இல்லை .....

என் -உருவத்தை நீ ..
உற்று நோக்க நான் ...
உயிரும் அல்ல ...

எனை கட்டி தழுவ நீ ...
நான் உடலும் அல்ல ..

பின் -ஏனோ இப்படி நீ ...
என்னை உறுத்து பார்க்கிறாயோ ...

உண் -பார்வையில் என் -ஓவியமும் ..
குன்றுகிறதே வெட்கத்தால் ...

சீ -உண்னை சொல்லி குற்றமில்லை ....
என்னை வரைந்த ஓவியனை சொல்லணும் ...

எனை வரைந்த ஓவியனே -நீ ....
காலை ரசனை என்ற பெயரில் ...
அலங்கோலமாய் என்னை -நீ ...
கல்லில் வரைந்து இருந்தாலும் ....

துஷ்ட பார்வைகளிலே -நான் ...
கற்பிழந்து போவானோ ?
என -அட்சம் வருகிறது எனக்கு..


ஓவியம் என்றாலும் ..
நானும் பெண்தானே...
எனக்கு முழு ஆடை போட்டு ...
என் -உடலை மறைத்து விடு ஓவியனே...
இல்லாவிட்டால் உண் ஓவியம் செத்துவிடும் ...
நான் விடும் கண்ணீரால்


மரணம்
எளிதில் மரணிக்க வேண்டு மென்றால் ......
ஓரு துளி விசமும் ...
ஓரு முழம் கயிறும் இருந்தால் போதும் ...
உடனே நிமதியான மரணம் கிடைக்கும் ....

அதே ஒரு முழம் மஞ்சள் கயிற்றை...
பெண்ணின் கழுத்தில் தாலியாக கட்டினால் ....
துளி துளியாய் விச வார்த்தைகளை .....
தினம் தினம் அனுபவித்து .....
நீண்ட இடைவெளிக்கு பின் மரணிக்கலாம்

aathi

ஆதி
ஈரைந்து மாதம்
தன் கருவறையில்
தன் உயிரினில் - ஓர்
உயிராய் சுமந்த தாய்
ஓரு நாளும் உன்னை
மனதார எப்போதும் .
வெருதிட மாட்டாள்

சீராட்டி பாராட்டி பார்த்து
பார்த்து வளர்த்த- நீ
கட்டிளம் காளை வயதில்
விபத்தால் கால் முறிந்து
நடக்க முடியாது போனாலும்

உண்னை -தன் விழியில் வைத்து
இமையாய் காக்கின்றாளே
சிறு குழந்தை போல் இப்போதும்

ஊராரும் குடும்பத்தாரும்
சண்டையிட்டு கேலி செய்தாலும்
உனக்காகவே வாதாடுகிரளே

உண் - தந்தையும் இன்றி
தனி ஓரு பெண்ணாய்
உண்னை போற்றி காகின்ராளே
அவளுக்காக நீ பொருத்து கொள்

தன்னால் சண்டை என்று
சாக நீயும் துணிவது
கோழையின் செயலப்பா

நாமும் வாழ முடியும் என்று
தாய்க்கு இருக்கும் நம்பிக்கையை
நீ - கெடுத்து விடாதாதே

நீயின்றி வாழ -உலகில் அவளுக்கு
இனி -வேறு என்ன இருக்கிறது ?

மரணம்தான் நிம்மதி என்றால்
தவிக்க விடாது -அவளையும்
உன்னுடன் அழைத்து செல் -நீயே

உற்றாரும் உறவினரும்
ஊராரும் ஒரே அடியாக
பேசி தீர்த்திடுவார்கள்
ஆதியின் குடும்பம் முடிந்த தென்று

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

ஆசை ஆசை
காக்கை குருவியாக பிறந்திடனும் .....
அடிமையில்லா வாழ்வு வாழ்ந்திடனும் .....
சுதந்திரமாய் சுற்றி பறந்திடணும் ......

போட்டியில்ல வாழ்வு வேண்டும் ....
பொறாமையில்ல அந்நிலைமை வேண்டும் ....
கூடி வாழும் கூடு வேண்டும் .....

பிற பறவையின் குஞ்சுகளையும் ....
தன்குட்டியாய் நினைத்து ....
உணவு கொடுக்கும் அன்பு வேண்டும் ....
விரைவில் சாகும் அப் பறவைகள்.....
போல் - பிறப்பு வேண்டும் என்ற ....
ஆசை ஆசை எனக்கு எபோதும் ஆசை ...... 12 பிப்ரவரி நீக்கு latha
கொஞ்சும் மொழி பேசும் .....
பட்சை கிளியாய் பிறந்து .....
பாடி திரிய ஆசை ..ஆசை ....

இசைகென்று ஓரு பறவை .....
கருங்குயிலாய் பிறந்து ....
இசைத்திட ஆசை ஆசை ....

தத்தி தத்தி செல்லும் .....
அன்னநடை வாத்தாய் பிறந்து ....
அசைந்து அசைந்து செல்ல ஆசை ஆசை ....

கொக்காய் பிறந்து ...
ஒற்றை காலில் நின்று ....
தவம் புரிந்திடவும் ஆசை ஆசை ....

பட்டு தோகை எனும் ....
வண்ண இறகுகளை விறித்து .....
வானம் பார்த்து நடனமாடும் .......
மயிலாய் பிறந்து மகிழ்ந்திடவும் ஆசை ஆசை




நந்தவனம்

நந்தவனம் உங்களின் ......
சொந்தவனம் வந்து செல்ல .....
இது -ஓரு புதுமை நிரம்பியா .....
பூக்களும் வித்தியாசமான நறுமணங்களும் .....
நிரம்பிய பூங்காவனம் இது .....

வண்ண வண்ண மலர்களும் ......(உறுபினர்களும் )
(அவர்களின் ) அவற்றின் வித விதமான ....
அறிவு எனும் வாசனையுடன் ...
மகிழ்சியை பொங்க வைக்கும் ...............
புதுவனம் இது புது வனம் ......

நக்கலும் நையாண்டியுமாய் .....
வியப்பும் ஆச்சரியமும் ....
அன்பும் அரவணைப்பும் .......
ஆத்திரங்களையும் ஆதரவையும் ....
கொட்டி மகிழும் -ஓரு ....
மகிழ்சிவனம் இது மகிழ்சிவனம் ......

வாருங்கள் நண்பர்கள்களே ....
வந்து இந்த வனத்தின் ......
தோட்டத்தில் நீங்களும் -உங்களை .....
புது மலர்களாக பதியமிட்டு சேருங்கள் .....

தீது மனம் படைத்தோரும் .......
தீய குணங்கள் உடையோரும் கூட .....
இங்கு உறுபினர்கள் -ஆனால் ...............
நல்ல மலர்களோடு சேர்ந்து .........
நீரும் மனம் கமழும் மலராகலாம் ......

பூவோடு சேர்ந்து நாறும் மணக்குமாம் ....
நந்தவனத்தில் பூக்கும் ( சேரும் )-நீங்களும் ....
நறுமணம் வீசி நாட்டில் .....
நற்பெயரை எடுதிடலாம் .....

வந்தனம் வந்தனம் -எல்லோரும் ....
எங்கள் நந்தவனத்திற்கு வந்தனம்



வெட்டி மொக்கையும் (ஜாலி நம்பெர்ச்சும் )

வாங்க வாங்க எல்லோரும் -இங்கு ...
ஜாலியா வாங்க வாங்க ......
மனமார மனம் விட்டு பேசி ....
காற்றாய் தழுவும் சிரிப்பும் ....
கடலாய் பொங்கும் நண்பர்களின் அரட்டையுமாய் ......
வெட்டி மொக்கையின் அரட்டை .....
ஜோதியில் கலந்து சந்தோசம் பெற்றிடவே .....

வெட்டி மொக்கை என்றதும் ....
வெத்து வேட்டுகள் பேசும் .....
வெட்டி அரங்கம் என்று நிணைகாதீர் நன்பர்களே...

சின்ன சின்ன வார்த்தைகளையும் ...
வெட்டி வெட்டி பேசி ...
வெட்கத்துடன் சிரிக்க வைக்கும்.....
நண்பர்களும் இங்கு உண்டு ......

சின்ன சின்ன விஷங்களையும் .....
பட்டி மன்றன் போட்டு .....
பகுதி பகுதியாக பிரித்து .....
நகைசுவையாக சிந்தித்து ....
சிரிக்க வைக்கும் நண்பர்களும் இங்கு உண்டு ....

பஞ்சாயத்து கூட்ட மென்று ...
எல்லோரையும் வரவழைத்து ......
யாரையாவது மாட்ட வைத்து ......
ரவுண்டு கட்டி நகை சுவை அம்புகளால் .....
துளைத்து அலற்வைத்து .......
பட்டை கிளப்பும் நண்பர்களும் இங்கு உண்டு ....

சொல்ல சொல்ல என்னால் ...
சொல்லவும் முடியலை .....
சொல்லாமல் இருக்கவும் முடியலை ....

ஜாலியா இங்கு எல்லோரும் வாங்க வாங்க ....
நல்லா சிரிங்க சிரிங்க .....
டாக்டர் காசை மிட்ச படுத்துங்க ......

வியாழன், 11 பிப்ரவரி, 2010

மனதை திருடி விட்டாய்
மனதை திருடி விட்டாய்
மொட்டவிழ்ந்து சிரிக்கும் மல்லிகையே.....
உண் -வாசத்தால் மனதை மயக்கும் மலரே\ ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

கள்ளமில்லா பூஞ்சிரிப்பில் .....
கவலையை மாறாக செய்த .....
பச்சிளம் குழந்தையே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

மத்தாப்பாய் சிதறுகின்ற ......
மழை தூரலே உண் -குளிர்சியால் ......
.நீ -என் மனதை திருடி விட்டாய் .........

சுட்டு எரிகும் சூரியனே .....
உண் -வெப்ப கதிர்களின் .......
அழகில் தங்கமாய் ஜொலித்து .....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

நுரை நுரையாய் பொங்கி ....
அழை அலையாய் ஆர் பறிக்கும் கடலே ...
நீ -உண் குளிர் காற்றால் ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

கண்ணனுக்கு தெரியாது ......
மனதிற்கும் புரியாது ....
அரூபமாய் வந்து ...
அமைதி படுத்தும் -தென்றலே ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

எவ் உயிர்களையும் தாங்கி ......
என் -நிலையில்லும் மாறாது ......
பசுமை வறட்சி வறுமை .....
இன்பம் துன்பம், எவட்ரையும் ....
தன்னுள் அடைகி அமைதி காக்கும் ...
சுமை தாங்கி பூமியே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........



ஊமை விழிகள்
ஊமை விழிகள்
தங்க நிலவாய் ஜொலித்து ...................
தத்தி தத்தி நடந்து வந்த .....
ஓரு வயது சிறுமியின் ......
அன்ன நடையை ரசித்த போது //// ......


தாவி வந்து அள்ளினால் -தாயோ .....
குழந்தை அது சினுங்கிடவோ .....
சிரித்தபடி குழந்தையை மார்போடு ....
அணைத்து தட்டி தந்தாள் அன்னையவள் .....

உற்று பார்கையிலே.....
உள்ளம் நடுங்கி போனேனே ......
ஐயோ கடவுளே-இது ....
என்ன வேதனை என்று ....

கருவறையின் இருட்டில் இருந்து ....
ஈரைந்து மாதம் கழித்து ....
பூமியை காணவரும் சிசுகளோ .....
கொட்ட கொட்ட முழிதிருக்குமே ......
பொல்லாத உலகை காணும் ஆவலில் .....

அனால் -இக் குழந்தையோ .....
இருட்டில் இருந்து இருட்டையே...
பார்த்து பார்த்து வாழ பிறந்து இருக்கிறதே .....

தாமரை மலரில் கருவண்டாய் ......
விழிபார்வை நீந்தும் இடத்தில .......
வெள்ளிநிலவாய் மின்னியதும் ..... ......
ஊமைவிழிகளாய் இருந்ததும் கொடுமை .....

கண்டிட்ட என் விழிகளிலோ ....
கண்ணீர் ஊட்ரெடுக்க.....
பிறவி ஊமை கை கால் ஊனம் என்றால் .....
உலகை கண்டிடலாம் .....
கண் இல்லாதோரோ மிக்க பாவம் ....

இவர்கள் ஒலியை உணரலாம் ....
ஒளியை உணர்ந்திட முடியாது ....
தம் இருட்டு உலகத்தில் ...
கேட்பவனவற்றை கற்பனை செய்து ....
தாமே உருவகபடுத்தி பார்த்திடும் கொடுமை -அவர்களுக்கு ....

ஆனால் -ஓரு சந்தோசம் ...
ஆரோக்கியமாய் பிறகும் .....
ஆயிரம் ஆயிரம் குழந்தைகளை .....
தேவை இல்லை என்று ....
கள்ளிபாலையும் நெல் vithaigalaiyum ....
ஊற்றி கொலை செய்யும் பாதகர்கள் நடுவே ......
கண்ணிலா குழந்தையை கண்ணாய் ....
காக்கும் தாய் அவளின் அன்பை -நிணைத்து .....
உள்ளம் பூரித்து போனதுவே ......

சிசுகொலையின் போது உடன் இருக்கும் -பாவிகளே .....
விழி இருந்து ஊமையாய் நிற்கும் .....
கொலைகார கும்பலே .....
எத்தானை துயரம் நெஞ்சில் ....
பாரமாய் இருந்தும் .....

புன்னகையுடன் குழந்தையை ....
அரவனைத்த அந்த தாயை -பார்த்திட்டால் ....
உம் -நெஞ்சங்களில் ஆயிரம் ஆயிரம் ....
வேல் பாய்ந்து இருக்கும் ....
குற்ற உணர்சியால் உங்களுக்கு .....

இப்போதும் என் கண்ணுகுள்ளே ....
சுற்றி சுற்றி வரும் அந்த தாய் .....
எனக்கு தெய்வமாகவே தோன்றுகிறாள்...




கண்ணீரும் காதலும் ....
கண்ணீரும் காதலும் ....

கண்ணீரால் காசுவரும் ......
காசுவந்தால் காதல் வரும் .....
காதல் வந்தால் கண்ணீர் வரும் ... .....

இரண்டிற்கும் என்ன ஒற்றுமை என்றால் .....
காதலால் சந்தோசமும் ....
காதல் தோல்வியின் வேதனையால் கண்ணீரும் .....
நிட்சயம் என்று தெரிந்தும் .....
ஏற்று கொளுவதுதான் மனிதனின் ......
நம்பிக்கை என்பதுதான் .... 8 பிப்ரவரி (3 நாட்களுக்கு முன்) நீக்கு latha
காதலும் கண்ணீரும் எல்லா உயிரனகளுகும் -உண்டு ..
இதில் மனிதர்கள் மிருகங்கள் பறவைகள் .....
என்ற வேறுபாடு கிடையாது 8 பிப்ரவரி (3 நாட்களுக்கு முன்) நீக்கு latha
நட்புக்காக
நிலவே மெதுவாக செல் ....
அழகான பறவையே சத்தத்தை குறை ....
இதயமே மெதுவாக துடிதிடு ... ....
என் நட்பு தூங்க போகிறது ......

இது கவிதைக்கு அழகுதான் -ஆனால் .....
நிலவு ஓடுவது பொய் ....
பறவைகளின் சத்தம் காதுக்கு இனிமை .....
இதயமோ மெதுவாக துடித்தால் ....
உயிர் போய்விடும் நண்பருக்கு தெரியாமல் ...

காதலுக்கும் கண் இல்லை .....
கவிதைக்கும் உண்மையில்லை இல்லை .....
நட்புக்கும் நம்பிக்கையில்லை ....
நான் சொல்லுவதும் உண்மையில்லை ....

திட்டாதீங்க நன்பர்களே ஓரு நண்பர் அனுப்பியதற்கு இந்த பதில் ....


அம்மாவும் மணைவியும்
அம்மாவும் மணைவியும்
பெற்ற மகவது அழுதாலோ ....
தாய் தாங்க மாட்டாள் ....
கண்ணீரை துடைத்திடுவாள் ....
அன்பால் குறையை போக்கிடுவாள் .....

கணவனுக்கு கஷ்டம் வரும் -என ....
அறிந்தாலே மணைவியவள் துடித்திடுவாள் .....
அதை தடுத்து காத்திடுவாள் .....
உயிருடன் உயிராய் கலந்த அன்பால் .....

தாய் எனும் உறவு பாதியில் ....
அளவுகோலாய் நின்றுவிடும் .....
அதன் -முடிவில் மணைவி எனும் .....
பந்தம் தொடங்கி இறுதிவரை தொடரும் ....

தாய் எனும் உறவு கோவில் .....
மணைவி எனும் உறவு கற்பகிரகம் ......
இரண்டுமே உயிர்தெழுந்து ...
உயிர் போகும் வரை மனிதனின் ....
நன்மை தீமைகளில் ப்ங்கெடுத்து ....
துன்பத்தையும் சந்தோசத்தையும் பகிர்த்து கொள்வான .....

சனி, 6 பிப்ரவரி, 2010

மனதை திருடி விட்டாய்
மொட்டவிழ்ந்து சிரிக்கும் மல்லிகையே.....
உண் -வாசத்தால் மனதை மயக்கும் மலரே\ ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

கள்ளமில்லா பூஞ்சிரிப்பில் .....
கவலையை மாறாக செய்த .....
பச்சிளம் குழந்தையே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

மத்தாப்பாய் சிதறுகின்ற ......
மழை தூரலே உண் -குளிர்சியால் ......
.நீ -என் மனதை திருடி விட்டாய் .........

சுட்டு எரிகும் சூரியனே .....
உண் -வெப்ப கதிர்களின் .......
அழகில் தங்கமாய் ஜொலித்து .....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

நுரை நுரையாய் பொங்கி ....
அழை அலையாய் ஆர் பறிக்கும் கடலே ...
நீ -உண் குளிர் காற்றால் ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

கண்ணனுக்கு தெரியாது ......
மனதிற்கும் புரியாது ....
அரூபமாய் வந்து ...
அமைதி படுத்தும் -தென்றலே ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

எவ் உயிர்களையும் தாங்கி ......
என் -நிலையில்லும் மாறாது ......
பசுமை வறட்சி வறுமை .....
இன்பம் துன்பம், எவட்ரையும் ....
தன்னுள் அடைகி அமைதி காக்கும் ...
சுமை தாங்கி பூமியே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........


தாம்பத்யம் ஓரு சங்கீதம் .......
தாம்பத்யம் ஓரு சங்கீதம் .......
திருமணத்தில் பிணைக்கபட்ட ......
கைகளும் மனங்களும் -பிரியாது .....
ஈருடலும் ஓர் உடலுமாய் இருபதுவோ ....
இருவர் மட்டுமே ஆனந்தமாய் .....
அன்பு படகில் பயணிக்கும் போது மட்டுமே......

தமகென்று ஓர் உயிர் உதித்ததுமே ......
இரு மனங்களிலும் எண்ணங்கள் பல பல ....
அவ்உயிர் உதித்து பூமியை தொட்டதும் ....
திட்டங்கள் உதிபதுவோ பல பல ....

பெண்ணாக பிறந்து விட்டால் .....
இதுதானோ என்ற சலிப்பும் உண்டு .....
இருமனங்களிலும் வெவ்வேறு .......
கவலைகளும் தோன்றுதல் உண்டு .....
லேசான விரிசலும் உருவாகும் மனங்களில் .....

பெற்றதுவோ நன்மக்களாக இருந்தால் ....
பாராட்டும் பெற்றிட்டால் -ணம் ....
மக்கள் என்று பெருமை பேசும் .....
இருமனங்களும் எப்போதும் .....

விதியால் மதிமாறி .-தறிகெட்ட ....
தறுதலை வாரிசுகளாய் ....
பலர் வாயில் விளுந்திட்டாலே ....
என்னடி பெற்றாய் குழந்தை -என்று ....
கணவன் மணைவியை திட்டுதலும் ....
உண் -ரத்தம் உன்போல்தான் இருக்குமென்று ....
மணைவி கணவனை திட்டுதலும் .....
மீண்டும் லேசன விரிசல் இரு மனங்களிலும் ....

மெல்ல மெல்ல இருவரின் குறைகளும் ....
வரிவரியாய் வாசிக்கப்படும் குற்றங்கலாய் ........
இங்கு அதிகரிக்கும் மனங்களில் விரிசலும் ....

எப்படியோ அடித்து பிடித்து ....
பெற்றதற்கு திருமணம் செய்விக்க .......
போலியாய் மீண்டும் அன்பு தம்பதியராய் .....
வலம் வந்து மனம் முடித்துவைத்து .....
அடுத்து இருமனங்களின் அன்பு விரிசலுக்கு வித்திட்டு .....

தம -பிறப்பின் தாம்பத்திய பந்தத்தின் ........
கடன் தீர்த்த சந்தோஷத்தில் .....
பலவருடங்கள் கழித்து .....
மனம் விட்டு பேசும் இரு மனங்களும் ....
நம் கட்டைகள் காடு சேரும்வரை ....
இனி ஒருவருக்கு ஒருவர் துணை -என்று .....
முதல் கட்ட அன்பிற்கு ..மாறுவதே.....
தாம்பத்தியம் ஓரு சங்கீதம் .....


காணலாம்
காணலாம்
ஜோதி எனும் நிலையில் ...... (jothi velissam )jothi yaar endru keatkaatheergal
ஒளியை காணலாம் ......

இருள் எனும் நிலையில் ....
கருமையை காணலாம் ....

உண்மை எனும் நிலையில் .....
சுய ரூபத்தை காணலாம் ....

மனம் எனும் நிலையில் ....
மனிதரை காணலாம் ......

உயிர் எனும் நிலையில் .....
உறவை காணலாம் ....

நட்பு எனும் நிலையில் ....
நன்மை தீமைகளை காணலாம் ....



நமக்கு உண்டு (கிடைக்கும் )
நமக்கு உண்டு (கிடைக்கும் )
மரம் என்று இருந்தால் ....
நிழல் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

மனம் ஒன்று இருந்தால் .....
அன்பு உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

பாசம் என்று இருந்தால் .......
பந்தம் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

அறிவு என்று இருந்தால் .....
அணைத்தும் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

ஆசை என்று இருந்தால் (பே(ராசை )
அழிவு உண்டு நமக்கு ....(கிடைக்கும்

வியாழன், 28 ஜனவரி, 2010

இளமையும் முதுமையும்
இளமை என்பதும் ....
முதுமை என்பதும் ....
உருவத்திற்கு கிடையாது ...
ஐயா உருவத்திற்கு கிடையாது ....

மனதிற்கும் உண்டு ....
நினைவிற்கும் உண்டு ....
இளமை என்பது எபோதும் ...
ஐயா இளமை என்பது எபோதும் ......

நிணைவுகளை பகிர்ந்து விட்டால் ....
காலத்தில் தொடரும் எபோதும் ....
நம் -சந்ததி வழிதன்னில் .....
ஐயா -நம் -சந்ததி வழிதன்னில் .....

மனமும் நிணைவும் ......
காலத்தில் தொடருவதே .......
முதுமையாகிறது ......
ஐயா முதுமையாகிறது .....

வயதிற்கும் உண்டு ....
பார்வைக்கும் உண்டு .....
முதுமை என்பதுவும் .....
இளமை என்பதுவும் ......
ஐயா மனதிற்கு கிடையாதே .....
.ஐயா மனதிற்கு கிடையாதே .....


நமக்கு உண்டு (கிடைக்கும் )
நமக்கு உண்டு (கிடைக்கும் )
மரம் என்று இருந்தால் ....
நிழல் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

மனம் ஒன்று இருந்தால் .....
அன்பு உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

பாசம் என்று இருந்தால் .......
பந்தம் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

அறிவு என்று இருந்தால் .....
அணைத்தும் உண்டு நமக்கு ....(கிடைக்கும் )

ஆசை என்று இருந்தால் (பே(ராசை )
அழிவு உண்டு நமக்கு ....(கிடைக்கும்


மனதை திருடி விட்டாய்
மொட்டவிழ்ந்து சிரிக்கும் மல்லிகையே.....
உண் -வாசத்தால் மனதை மயக்கும் மலரே\ ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

கள்ளமில்லா பூஞ்சிரிப்பில் .....
கவலையை மாறாக செய்த .....
பச்சிளம் குழந்தையே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

மத்தாப்பாய் சிதறுகின்ற ......
மழை தூரலே உண் -குளிர்சியால் ......
.நீ -என் மனதை திருடி விட்டாய் .........

சுட்டு எரிகும் சூரியனே .....
உண் -வெப்ப கதிர்களின் .......
அழகில் தங்கமாய் ஜொலித்து .....
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

நுரை நுரையாய் பொங்கி ....
அழை அலையாய் ஆர் பறிக்கும் கடலே ...
நீ -உண் குளிர் காற்றால் ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

கண்ணனுக்கு தெரியாது ......
மனதிற்கும் புரியாது ....
அரூபமாய் வந்து ...
அமைதி படுத்தும் -தென்றலே ...
நீ -என் மனதை திருடி விட்டாய் .........

எவ் உயிர்களையும் தாங்கி ......
என் -நிலையில்லும் மாறாது ......
பசுமை வறட்சி வறுமை .....
இன்பம் துன்பம், எவட்ரையும் ....
தன்னுள் அடைகி அமைதி காக்கும் ...
சுமை தாங்கி பூமியே ....
நீ -என் மனதை திருடி விட்டாய் .......

புதன், 20 ஜனவரி, 2010

காதல் அழகு
காதல் அழகு
வாழ்விற்கு கணவு -அழகு ....
அந்த கனவிற்கு கற்பனை -அழகு .....

கணவு கற்பனை இரண்டையும் .....
சாதித்து காட்டுவது மனிதனுக்கு- அழகு .....

காதல் எல்லோருக்கும் -அழகு .....
ஆனால் எல்லோரும் அந்த -அழகை .....
நேசிகத்தான் முடியும் -சிலரே ....
அதை சுவாசித்து வாழ்கின்றனர்


முத்தங்கள்
முத்தங்கள்
உட்சி முகர்ந்து முத்தமிடுவது ......
மொத்த அன்பையும் உணர்த்துவது ....

கண் இமைகளில் முத்தமிடுவது ......
உனக்கு கண்ணாய் இருபேன் என உணர்த்துவது ....

கன்னத்தில் முத்தமிடுவது ......
பிடித்த உயிர் என உணர்த்துவது ....

உதட்டில் முத்தமிடுவது ......
உயிரோடு உயிராய் இணைத்தவர் என உணர்த்துவது ....

கைகளில் முத்தமிடுவது ......
மரியாதையை உணர்த்துவது .......

கால்களில் முத்தமிடுவது ......
கடவுளாக நேசிப்பதை உணர்த்துவது ....
வலைதள காதல்
வலைத்தளத்தில் வலை பின்னும் -சிலந்திகளே .....
காதல் கூடு கட்டும் பறவைகளே ......

உம் -ஜோடி சரி என்று உணர்கிரீரோ .....
அதன் -உண்மை நிலை அறிகிரீரோ ......

பலரும் இங்கு காதல் என்ற மாயையில் -சிக்கி ...
அதன் வேகத்தில் சந்தோசித்து .....
சிலநாளில் முறிவடைந்து சோகத்தில் மூழ்கி ....
வாழ்கையே முடிந்தது என்று .....
இங்கிருந்து காணாமல் போவதேனோ ....

சில காதல் திருமணத்தில் முடிவதும் .....
சந்தோசம் என்றாலும் நடக்கும்வரை ....
.சந்தேகமே சந்தேகமே....

திருமணத்தில் சந்திக்கும் போது ...
நிறை குறைகள் தெரிவுதில்லையோ .....

ஐயோ -காண்பவர்கள் சிரிக்கிறார்களே .../....
பெண்ணோ ஒட்டகம் .....
மாபிளையோ எருமைபோல் ....
என்ன இது பார்க்காத வலைதள காதலோ ....
காதலுக்கு கண் இல்லை .....
என்பது இது தானோ -என்று .....



குயில்
கருப்பாய் பிறந்தவர்களுகோ ....
அட்டை கறுப்பர் என்ற அடை மொழியும் ....

பாட தெரிந்த கருபர்களுகோ ....
குயில் பாட்டு கறுப்பர் ....
எனும் அடை மொழியும் ....

கருப்பு குடும்பங்களுக்கோ ....
கருவாச்சி குடும்பம் எனும் -அடைமொழியாய் ...

பல குயில்கள் ....
பாட மாறுகின்றன....
சோகம்தான் நம் ....
வாழ்க்கை என்று எப்போதும் ....

குயில்களுக்கு கூடு ....
மறுத்த காகங்களும் ....
குயில் குஞ்சுகளுக்கும் -இனம் ....
தெரியாது இறையூடி மகிழ்கின்றதே ...

பறவைகளுக்கும் இனம் மொழி ....
வேறுபாடு தெரிகின்றபோது ....
மனித மணமகளை .......
சொல்லவும் வேண்டுமா ......

கூடுவிட்டு கூடு பாயும் ....
வித்தை அறிந்தால்.....
யாருகுமே நிலையான உண்மை ...
மனம் இல்லை என அறியலாமே .....
இதில் பெண்கள் மட்டும் ....
விதி விலக்கு அல்லவே....

பறவைகள் கூடு மாறினாலும் ....
குணம் மாறி போவதில்லை ......
மனித மனங்களோ -மாறினால் .........
மரணமெனும் கூட்டுக்குள் .....
அடங்கி நிமதியை தேடமுயல்கின்றன ...
இறக்கை முளைத்ததும் ......
..பறக்க தெரிந்ததும்........
பறவைகள் இடம்மாறி வாழ்கின்றனா ......

மனிதர்களில் பலரோ ஊர் மாறி ....
போய் பார்ப்பதும் கிடையாதா ....



பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்து
வீதியை அடைக்கும் .....
வண்ண வண்ண கோலங்களும் ...
இளசுகளும் பெருசுகளும் ....

வாய்நிறைய சிரிப்புமாய் ....
புத்தாடையும் புத்துனர்சியுமாய் ....
பொருபான எண்ணங்களும் .....
வாய் நிறைய பொங்கலுமாய் .....

எல்லோரும் மகிழ்சியுடன் .....
கொண்டாடும்... தமிழ் புத்தாண்டு ....
பொங்கல் வாழ்த்துக்கள்

திங்கள், 11 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்து
பொங்கல் வாழ்த்து
வீதியை அடைக்கும் .....
வண்ண வண்ண கோலங்களும் ...
இளசுகளும் பெருசுகளும் ....

வாய்நிறைய சிரிப்புமாய் ....
புத்தாடையும் புத்துனர்சியுமாய் ....
பொருபான எண்ணங்களும் .....
வாய் நிறைய பொங்கலுமாய் .....

எல்லோரும் மகிழ்சியுடன் .....
கொண்டாடும்... தமிழ் புத்தாண்டு ....
பொங்கல் வாழ்த்துக்கள்

முதுமை காதல்
முதுமை காதல்
காதலுக்கு கண் இல்லை என் பதைவிட .....
பல்லும் இல்லை என்பதை விட .....
மந்தமான காது இருக்கே ....

தனிமையை வெறுக்கும் .....
முதுமை அன்பிலோ ....
ஒருவரை ஒருவர் திட்டுவதை ....
ஏதோ பழங்கால நிணைவுகளை ....
கூறுவதாக நிணைத்து .....
சந்தோசித்து அசைபோடுவதும் ....

அன்பாக பேசும் போது ...
திட்டுவதாக நிணைத்து ....
சண்டையிடுவதும் முதுமை ....
காதலின் சோகம்பா...... 11-12-09 நீக்கு latha


காதல் அழகு
காதல் அழகு
வாழ்விற்கு கணவு -அழகு ....
அந்த கனவிற்கு கற்பனை -அழகு .....

கணவு கற்பனை இரண்டையும் .....
சாதித்து காட்டுவது மனிதனுக்கு- அழகு .....

காதல் எல்லோருக்கும் -அழகு .....
ஆனால் எல்லோரும் அந்த -அழகை .....
நேசிகத்தான் முடியும் -சிலரே ....
அதை சுவாசித்து வாழ்கின்றனர்


ஓரு வார்த்தை
அன்பு என்ற ஓரு வார்த்தைக்கு அம்மா .....
யாசிப்பு என்ற ஓரு வார்த்தைக்கு கடவுள் .....
நேசிப்பு என்ற ஓரு வார்த்தைக்கு நீ .....
அதை சுவாசிக்கும் ஓரு வார்த்தைக்கு நான்

புத்தாண்டே வருக வருக
புத்தாண்டே வருக வருக ........
புது மலரே வருக வருக ........
புதுமைகள் பல படைத்திட வருக வருக .......

புண்ணகையும் பொன்னகையுமாய் ....
பூரிப்புடன் எல்லோரும் சிறப்பாய் - வாழ .....
புத்துணர்வுடன் எழுச்சிக் கொண்டு வருக வருக ......

ஏழ்மை எனும் வார்த்தைகள் இன்றி .....
எல்லோரும் ஏற்றமுடன் வாழ வருக வருக ....

கல்வியின்மை இல்லை எனும் பேசின்றி ......
எல்லோரும் கற்றவர் களாக மாற்றிட வருக வருக ......

நாம்-பிட்சை கிற்கும் நிலைமை மாறி ......
பிற நாட்டோர் இங்கு கையந்தும் படி வருக வருக .....

உலவும் பெருகி நாவும் பெருகி ..-எல்லோரும் ........
வயிறார உண்டு மகிழ வருக வருக ......

நம் -தேசம் விற்கும் தொர்கிகளை .....
நீ -அழித்திடவே வருக வருக ....

நாடே உயிர் என்றும் தமிழீழ மூச்சு என்றும் ....
நம்பி வாழும் மக்களுக்கு -நல .....தமிழ்லே நீயே ஓரு கவிதைதான் ...
உண்னை வகை பிரித்து ....
எதனையோ மொழிகளில் மாற்றி .....
பாடினாலும் பேசினாலும் ....

தமிழை தமிழாக ...கேட்பதிலும் .....
ரசிபதிலும் கிடைகும் ஆனந்தம் .....
.எல்லோருக்கும் எல்லா ஜென்மத்திலும் .....
கிடைத்திட இறைவன் ஆஸ்ரிவதிக்கட்டும்
வாழ்வு தந்திடவே வருக வருக முதுமை காதல்
முதுமை காதல்
காதலுக்கு கண் இல்லை என் பதைவிட .....
பல்லும் இல்லை என்பதை விட .....
மந்தமான காது இருக்கே ....

தனிமையை வெறுக்கும் .....
முதுமை அன்பிலோ ....
ஒருவரை ஒருவர் திட்டுவதை ....
ஏதோ பழங்கால நிணைவுகளை ....
கூறுவதாக நிணைத்து .....
சந்தோசித்து அசைபோடுவதும் ....

அன்பாக பேசும் போது ...
திட்டுவதாக நிணைத்து ....
சண்டையிடுவதும் முதுமை ....
காதலின் சோகம்பா...... 11-12-09 நீக்கு latha

செவ்வாய், 5 ஜனவரி, 2010

செலீனா குட்டி
செலீனா குட்டி
உண் -முகத்தை பார்த்துதான் ....
தினமும் ஆதவன் பிரகாசிகின்ரானோ ....

உண் -கனிவு பார்வையில்தான் .....
பசியும் மறந்து போகிறதோ ....

உண் -அன்பு pea சில்தான் ....
மனம் கரைந்து போகிறதோ .....

உண் -சிந்தனையும் கவிதையும் ....
புன்னகையும் அன்பும் கனிவும்தான் ....
உண்னை நாட செய்ததோ சிவாவை


கண்ணீர்
கத்தியின்றி ரத்தமின்றி .....
செலவுமின்றி செயலுமின்றி ....
ஆயுதமாய் இருக்குது ......

அரசரையும் ஆண்டியாகும் ......
ஆண்டியையும் அரசராகும் .....

தைரியத்தையும் கோழையாகும் .....
கோழையையும் தைரியமாகும் ....

ஆறுகரை கடலெல்லாம் .....
புரண்டாலும் அடங்கிடும் .....

கண்ணீரோ ..பெருகெடுதால் .....
அடித்து புடித்து நினைததெல்லாம் ....
அடைந்து விட்டு அடங்கிடும்...




முத்தங்கள்
உட்சி முகர்ந்து முத்தமிடுவது ......
மொத்த அன்பையும் உணர்த்துவது ....

கண் இமைகளில் முத்தமிடுவது ......
உனக்கு கண்ணாய் இருபேன் என உணர்த்துவது ....

கன்னத்தில் முத்தமிடுவது ......
பிடித்த உயிர் என உணர்த்துவது ....

உதட்டில் முத்தமிடுவது ......
உயிரோடு உயிராய் இணைத்தவர் என உணர்த்துவது ....

கைகளில் முத்தமிடுவது ......
மரியாதையை உணர்த்துவது .......

கால்களில் முத்தமிடுவது ......
கடவுளாக நேசிப்பதை உணர்த்துவது ..

மொத்த முத்தங்களும் ஒருவரு கியா .....
தரபட்டால் கொடுப்பது ......
மணைவியாகதான் இருக்க முடியும் ..... .
இது ஓரு நண்பர் கேட்டதற்கு சொன்ன பதில் ......



மூன்று எழுது
நன்றி என்பது மூன்று எழுத்து .....
அதை உணர்த்தும் -அன்பு .....
என்பது மூன்று எழுத்து ......

காதல் என்பது மூன்று எழுத்து ......
அதை உணர்த்தும் - நெஆசம் .....
என்பது மூன்று எழுத்து ......

பிரிவு என்பது மூன்று எழுத்து ....
அதை உணர்த்தும் -சாதல் .....
என்பது மூன்று எழுத்து ....

panpu என்பது மூன்று எழுத்து .....
அதை உணர்த்தும் -குணம் ....
என்பது மூன்று எழுத்து .....

மணம் என்பது மூன்று எழுத்து .....
அதை உணரும் -மனம் ......
என்பது மூன்று எழுத்து .....

நட்பு என்பது மூன்று எழுத்து ......
அதை அடையும் -நன்மை .....
என்பது மூன்று எழுத்து ......




நிலவும் பெண்ணும் latha
நிலவும் பெண்ணும்
வான மெனும் எல்லைக்குள் ......
வட்டமிடும் நிலவே-நீ ....
உண் -எல்லைக்குள் நின்றே ....
மின்னலாய் பிரகாசிக்கின்ராய் ....
எல்லோருக்கும் சந்தோசம் தருகிறாய் ....
எல்லை இல்லா அமைதியாய் ...
பேசதா நீ எல்லோரும் .....
கதையாய் காதலாய் கவிதையாய் ....
உண்னை பற்றி பேச வைகிறாய் .....

இல்லரமெனும் வட்டமிடும் பெண்களோ ....
குத்துவிளகென்று வீட்டிற்குள் தம் ...
திறமைகளால் பிறகாசிகின்றனர் ......
சிலர் உரைகல்லாய் தேய்வதும் உண்டு .....
இவர்களும் கதையாய் காதலாய் கவிதையாய் .....
எல்லோராலும் பேசபடுகின்றனர் ....

நிலவை எல்லோரும் பார்க்கலாம் ரசிக்கலாம் ......
எல்லா பெண்களையும் எல்லோரும்
கண்டிடவோ ரசிகவோ முடியாதே

சனி, 2 ஜனவரி, 2010

நிலவும் பெண்ணும்
வான மெனும் எல்லைக்குள் ......
வட்டமிடும் நிலவே-நீ ....
உண் -எல்லைக்குள் நின்றே ....
மின்னலாய் பிரகாசிக்கின்ராய் ....
எல்லோருக்கும் சந்தோசம் தருகிறாய் ....
எல்லை இல்லா அமைதியாய் ...
பேசதா நீ எல்லோரும் .....
கதையாய் காதலாய் கவிதையாய் ....
உண்னை பற்றி பேச வைகிறாய் .....

இல்லரமெனும் வட்டமிடும் பெண்களோ ....
குத்துவிளகென்று வீட்டிற்குள் தம் ...
திறமைகளால் பிறகாசிகின்றனர் ......
சிலர் உரைகல்லாய் தேய்வதும் உண்டு .....
இவர்களும் கதையாய் காதலாய் கவிதையாய் .....
எல்லோராலும் பேசபடுகின்றனர் ....

நிலவை எல்லோரும் பார்க்கலாம் ரசிக்கலாம் ......
எல்லா பெண்களையும் எல்லோரும்
கண்டிடவோ ரசிகவோ முடியாதே...


புத்தாண்டே வருக வருக
புத்தாண்டே வருக வருக ........
புது மலரே வருக வருக ........
புதுமைகள் பல படைத்திட வருக வருக .......

புண்ணகையும் பொன்னகையுமாய் ....
பூரிப்புடன் எல்லோரும் சிறப்பாய் - வாழ .....
புத்துணர்வுடன் எழுச்சிக் கொண்டு வருக வருக ......

ஏழ்மை எனும் வார்த்தைகள் இன்றி .....
எல்லோரும் ஏற்றமுடன் வாழ வருக வருக ....

கல்வியின்மை இல்லை எனும் பேசின்றி ......
எல்லோரும் கற்றவர் களாக மாற்றிட வருக வருக ......

நாம்-பிட்சை கிற்கும் நிலைமை மாறி ......
பிற நாட்டோர் இங்கு கையந்தும் படி வருக வருக .....

உலவும் பெருகி நாவும் பெருகி ..-எல்லோரும் ........
வயிறார உண்டு மகிழ வருக வருக ......

நம் -தேசம் விற்கும் தொர்கிகளை .....
நீ -அழித்திடவே வருக வருக ....

நாடே உயிர் என்றும் தமிழீழ மூச்சு என்றும் ....
நம்பி வாழும் மக்களுக்கு -நல .....


தமிழ்
தமிழ்லே நீயே ஓரு கவிதைதான் ...
உண்னை வகை பிரித்து ....
எதனையோ மொழிகளில் மாற்றி .....
பாடினாலும் பேசினாலும் ....

தமிழை தமிழாக ...கேட்பதிலும் .....
ரசிபதிலும் கிடைகும் ஆனந்தம் .....
.எல்லோருக்கும் எல்லா ஜென்மத்திலும் .....
கிடைத்திட இறைவன் ஆஸ்ரிவதிக்கட்டும்
வாழ்வு தந்திடவே வருக வருக
புள்ளி
அவள் -வைத்த புள்ளிகள் .....
உன் -வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி .....
என்கிறாய் திருமணத்திற்கு -பின் ...

அவள் -புள்ளிகள் வைத்ததோ ....
தன் -எதிர்காலத்தை எதிர்நோக்கி .....
பால் பாகெட் களவை தடுக்க -என ....
நீ -தினமும் அவள் கோலமிடும் -நேறத்தில் ....
கவனித்ததாலே அவள் வாழ்க்கைக்கு /.....
நீயே -ஆரம்ப புள்ளி வைக்கும்படி ஆனதோ ...

அதனாலே உன் வாழ்க்கைக்கு -நீயே ......
முற்று புள்ளியும் வைத்து கொண்டாய் .....
விதை விதைத்தது -நீதான் ...
வினையை அனுபவிக்க வேன் டியதும் -நீதான் ...

இது -கடவுள் உனக்கு விதித்த ,...
காலத்தின் கட்டாயமோ என்னவோ ... 12-12-09 நீக்கு latha
தயக்கம்
அண்ணலும் நோக்கினான் ...
அவளும் நோக்கினாள் ...
இருவருக்கும் தயக்கம் ...

கிழே கிடக்கும் -ஒரு ரூபாயை ....
யார் எடுப்பது என்று ....

இதில் எதுக்கு தயக்கம் -பணம்மோ ...
இருவருக்கும் சொந்தமில்லாத போது ...
யாரோ ஒருவர் எடுத்தது -இருவரும் ....
பிப்ட்டி பிப்ட்டி வைத்து கொள்ளலாமே ....

கஸ்ட்டகால தயக்கமும் நஸ்ட்டமாகாது ...
காலத்தால் இருவரும் இணைதிடவே ....
இறைவன் சோதிகிறானோ இருவரையும் ..... 12-12-09 நீக்கு latha
தாலி
தாலி குடும்பம் எனும் ...
பணத்திற்க்காக பெண்ணினங்கள் ...
ஆண்களிடம் தலை குனிவதும் ....

ஆழ்கடலில் நீந்துவது போல்தான் ...
கரை சேர்ந்தால் வெற்றி .....
மூள்கிபோனால் மரணம்தான் ....

என்ன செய்ய கரணம் தப்பினால் .....
மரணம் என்பதுவே மனித வாழ்க்கை .....

முயற்சி
நீ -ஒரு பெண்ணை காதலிப்பது ...
தற்கொலை என்றாலும் ...

உன்னை -ஒரு பெண் காதலிப்பது ....
கொலை முயற்சி என்றாலும் ....

முயற்சிகளை திரு (மனம் )வினையாகுவது .....
தமக்கு தாமே குழிபறித்து கொண்டு .....
நம்மையும் குழியில் தள்ளுவது பெற்றோறே .....

பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமகின்னா ...
பிற்பகல் தாமே வரும் ....
என்செய்ய விதியை ...
மதியால்தான் வென்று காட்டனும்