புதன், 23 ஜூன், 2010

என்னுயிரே
உயிராய் மதித்து
அன்பாய் கலந்து
ஆசையாய் இணைந்து
உடலால் கலந்து

உயிர்ப்பித்த இன்னுயிரே-நீ
பின்னடமாய் உருண்டு
ஐயிரண்டு திங்கள்
கருவறையின் கவசத்தினுள்
உயிராய் வளர்ந்து
என்னை மறுபடியும் உயிர்ப்பித்து

உன் -உயிராய் இப் பூ உலகில்
ஜனித்த சிசுவே -உன்
உன் -பட்டு உடலை தடவி

உன் -பூ பாதத்தில் முத்தமிட்டதும்
என் -வலி எல்லாம் மறைந்ததுவே என்னுயிரே

சந்தோஷத்தில் இரு சொட்டு கண்ணீர்
உன் -பாதத்தை தொட்டதும்
நீ -உன் உடல் சிலிர்த்து நெளிந்ததும்

என் -கண்கள் தேடியதோ
அம்மா என்று அழைக்க
உண்னை என்னுள் உயிர்ப்பித்த
என்னுயிர் உன் தந்தையைதான் என்னுயிரே
*********************************************************************************

நீயும், அவளும்

நீயோ ஆண் சந்ததியை உருவாக்குவாய்
உன் மனைவியோ பெண்
சந்ததியை உயிர்பிப்பவள்



இருவரும் இன்றி தனித்து
ஜனனமும் இல்லை -உன்
சந்ததியும் இல்லை

*****************************************
இதயம்
உன் -இதயம் தொட்ட அவளின் உருவம
உன் - நிழலை தண்டி போகிறதே
உன் -நண்பனை நோக்கி

காதல் எனும் மோகத்தால்
உன் -உயிரோ அவளின் பின்
நிழலாய் தொடர்கிறது சோகமாயோ ?????????/

***************************************************


கடல்
பேரலையாய் ஆர்பரித்து
துள்ளி துள்ளி பாய்ந்து வந்து
அமைதியாய் கரைத்தொட்டு
வெனுரையால் முத்தமிட்டு
அமைதியாய் செல்லும் -உன்
அழகு என்ன? அடடா !அடடா !

பொங்கிவரும் பேரலையுடன்
குளிர் தென்றலை அள்ளிவந்து -தெளித்து
அனைவரையும் ஆனந்தம் கொள்ளசெய்யும் -உன்
அழகு என்ன?அடடா !அடடா !

*******************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக