புதன், 16 ஜூன், 2010

இமைகள்

மூடிய இமைகளில்
உறங்கி கிடக்கும்
உண்மையும் பொய்மையும்
எத்தனை எத்தனையோ?

********************************************
ரோஜா

இதழ் பிரிந்த ரோஜாவே
உன் -அங்கம் பிரிந்ததென்று
ஆதங்கமோ உனக்கு

இளமை எனும் அழகும்
முதுமை எனும் மூப்பும்
மனிதர்களுக்கும் உன் போல்தான்

இளமையில் அழகால் மிளிர்ந்து
முதுமையில் தோள் சுருங்கி வாடுவது

*****************************************

விழிகள்

அழை பாயும் விழிகளில்
என்ன எதிர் பார்போ ?
எந்த யுகத்தில்தான் வரதட்சனை
கேட்காது மணக்கவரும்
ஸ்ரீ ராமர்கள் கிடைப்பார்கள் என்றா?

உதடு பிரியாதது கூறுவது யாதோ ?
ஏகங்களும் எதிர் பார்ப்புகளும்
பெண் இனங்களுக்கு விதிக்கப்பட்ட
நீதி சாசனம் என்றோ ?

பாரதி கண்ட புதுமை பெண்கள்
மலர்ந்தாலும் மறைந்தாலும்
திருமண சந்தையில் பெண் இனங்களின்
நிலைமைக்கு எந்த மறுத்தாலும் வரவில்லையே

எப்போது பிறக்கும் விடிவு என்ற
ஏக்கமோ இக் கண்களில்

*********************************************

அவளுடைய கண்கள்

கூறிய இரு அம்பால் துளைத்த என் -இதயம்
குருதி பொங்காது சந்தோஷத்தில் திளைப்பது
துளைத்தது அவள் கூறிய கண்கள் என்பதாலோ !!!!!!!!

*******************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக