திருமணம் ( குட்டி கவிதைகள் பத்து )
பல மனங்கள்
முடிவு செய்து
இரு -மனங்களை
இணைப்பது திருமணம்
************************************
விவாகரத்து
இரு -மனங்கள் முடிவு செய்து
பல -மணங்களை
நோகடித்து பிரிவது விவாகரத்து
***********************************************
அழகு
பின்னாளில் உரு குலைந்து -போனாலும்
முன்னாளில் அல்லைய வைப்பது -அழகு
*************************************************
அன்பு
இறந்து போனாலும்
அனைவரையும் மனம்
உருகி அழவைப்பது -அன்பு
(2) என்றோ நீர மறந்து -போனாலும்
இன்றும் என்னை அழவைப்பது
உம் -உண்மை அன்பு
**********************************
உயிர்
காற்றில் கரைந்தாலும்
கண்ணீரில் மறைந்தாலும்
அன்பே என் -நிணைவுகள் உனக்கும்
உண் -நிணைவுகள் எனக்கும்
என்றும் -உயிர் என்று
அந்த காலனுக்கு (எமன் ) தெரியுமோ ?
****************************************
குழந்தைகள்
முன்னாளில் நமக்கு -நிழல்
பின்னலில் நாம்
அவர்களுக்கு நிழல்
******************************************
பரம்பரைகள்
நம் -வாழ்க்கை சுவடை
வாரிசுகள் வழியாக
வழி வழியாய் வாழ்ந்து
காட்டும் நாடக கூட்டங்கள்
பரம்பரைகள்
**************************
நிழல்
நிணைவில் தேங்கிய
நிஜங்களின் மறைப்பு -நிழல்
****************************************
புருஷன்
பிடிக்காத மணைவி என்றால்
அவளுடன் பேசமாடான்
சண்டை போடா கூட -எப்போதும்
பிடித்த மணைவி என்றால்
அவளுக்கு இவனை பிடிக்கா விட்டாலும்
கனவிலும் கூட பேசுவான்
அவளுடன் எப்போதும்
********************
ஞாயிறு, 18 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக