திங்கள், 26 ஏப்ரல், 2010

இனியவளே

கிராமத்தான் என்றாலும்
படித்தவன் என மனத்தால் விரும்பி
விவசாயி என்னை மணந்த
படித்த பட்டதாரி மணைவியே
என் -உயிரின் இனியவளே !!!!!!!!!!!!!!!!

பாசமாய் நேசமாய் ஓர் உயிராய் கலந்து
நாம் -வாழ்ந்த இல்லறத்தின்
சந்தோசம் விருட்சமாய்வளர
மணியான முத்து மகனை ஈன்று தந்த
என்- உயிரினும் இனியவளே !!!!!!!!!!

தத்தி தவழ்ந்த மழலையின்
முத்துகளாய் சிதறிய
சிறு வார்த்தைகளில் மயங்கி
மெய் மறந்து ரசித்ததை
என்னிடம் சொல்லி சொல்லி மகிழ்வாயே
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

இன்று -நம் வாழ்கையின் பயணத்தில்
ஏன் -இந்த திடீர் மாற்றமோ ?
உண் -உடன் பிறந்தான் இறந்ததால்
நீ -உண் பிறந்தகத்தில் பெற்றோர்களுடன்
இருகவேண்டிய நிலை ஏனோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!


என் -இரு கண்களுமானா
நீயும் மகனும் எனை பிரிந்து
அங்கு -இருபது அவர்களுக்கு சந்தோசம் என்றாலும்
இங்கு -கண்ணிருந்தும் குருடனாய்
நினைவிருந்தும் பித்தனாய்
நூலறுந்த பட்டம் போல்
உயிர் இருந்தும் ஜடமாய்
வாழும் நிலை எனக்கு ஏனோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

திருமணம் முடிந்ததும்
நாம் கிராமத்தை சுற்றியதும்
தோட்டத்தில் இருவரும்
நிலவை ரசித்தபடி சந்தோசமாய்
பேசிய நாட்கள் மீண்டும் கிடைக்குமோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

குழந்தையுடன் ஓடி பிடித்து
விளையாடி உணவு ஊட்டிய
குதூகலமும் உற்சாகமும்
இனி எப்போது கிடைக்குமோ ?
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!

தனித்து பித்தனாகி இங்கு
உங்கள் நினைவுகளுடன் -தோட்டத்தில்
மரங்களுடனும் செடிகளுடன்னும்
பேசி கொண்டு இருக்கிறேன் நீங்கள்
என்னுடன் இருப்பதாக நிணைத்து
என் -உயிரினும் இனியவளே !!!!!!!!!!!


என் -நிலை உணர்ந்து நீ
சிந்தித்து முடிவு செய்து
இங்குவர காத்திருக்கிறேன்

**********************************************************************************************************************************************


திருமண வாழ்த்து

புலி கொடி பறக்கும்
வீர மா நகரம்
பெரிய கோவிலை பெற்று
பெருமையுடன் விளங்கும் தஞ்சை
மாநகரிலே நடக்கும்
பத்மவள்ளி -கௌதமன்
தம்பதியருக்கு திருமண வாழ்த்து
மணநாள் 19-05-2010



பல மனங்கள் இணைந்து
முடிவுசெய்து முடிசுபோட்டு
இருமனங்கள் கலந்திட
நல் -மனங்கள் வாழ்த்திட
நடத்திடும் ஓர் இனிய விழா
திருமணம் திருமணம்

நீவீர் இருவரும்
அன்பை பரிமாறி
இரு மனங்களும் ஓரு மனமாகி
இல்லறமெனும் நல்லறம் நடத்தி
குலம் விளங்க நாடு விளங்க
நல் மக்களை பெற்று
நாடும் வீடும் போற்ற
சீராட்டி பாராட்டி
சிறப்புடன் வளர்த்து
நல்ல தமிழ் மகனாக
நாடு போட்ரும் வீர மகனாக வளர்த்து

இல்லறத்தின் இனிமையை
இளமை முடியும் முதுமையிலும்
சந்தோசமாய் வாழ்ந்து
சரித்திரம் படைக்க
மனமார வாழ்க வாழ்க -என
வாழ்த்தும் உங்கள் தோழமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக