செவ்வாய், 2 மார்ச், 2010

செல்வி என்கின்ற ஷீலாவிர்ற்கு (கண்ணீர் அஞ்சலி )

எங்கோ பிறந்தோம் .
எப்படியோ வளர்ந்தோம்
இங்கு ஆர்குட்டில் நட்பும் ஆனோம்

நல்ல தோழியாக இருந்தாய்
என் -நிலை குறித்து
அன்பாய் ஆறுதல் சொல்லுவாய்
ஓர் உயிராய் பிறந்து விட்டால்
வாழ்ந்துதான் ஆகாவேண்டும் என்று
எப்போதும் நம்பிக்கை கொடுத்திடுவாய்

உனக்கும் ஓரு சோதனை வந்தது
ஆம் -காதல் என்ற மாயையில்
மனதை ஒருவனிடம் பறிகொடுதாய்

அவன் உண்னை ஏற்க மறுத்ததும்
மனம் உடைந்து போனாயே
அப்போது உனக்கு நான் ஆறுதல்
சொல்லி உன்னை தேற்றினேன்

மனம் தெளிந்து நீயும்
வாழ்ந்த போது இன் நிலை
உனக்கு ஏன் வந்ததோ

இருசக்கர வாகனத்தில்
சென்றபோது விபத்து ஏற்பட்டு
அங்கேயே நீ இறந்து விட்டாய்
என அறிந்ததும் மனம் நொந்து போனேனே

என்மீது எனகே வெறுப்பும் வந்ததே
உண்னை ஓடி வந்து பார்த்திடலாம் என்றாலோ
இறைவன்தான் என் காலை
நடக்க முடியாது செய்து விட்டானே

நீ இறந்து இன்றுடன் நான்கு நாட்கள் ஆனாலும்
உன்னுடன் இங்கு ஆர்குட்டில்
இப்போதும் பேசுகிறேன் தணியா

அடுத்த ஜென்மம் என்று
நம் இருவருக்கும் இருந்தால்
நீ என்னக்கு தாங்கியாக
பிறக்க வேண்டும் தோழியே

இனி தினமும் நான்
இறைவனிடம் வேண்டும்
வரமும் இதுதான் தோழியே இதுதான்

1 கருத்து:

  1. இவள் என் தோழியும் கூட நண்பா மிகவும் அருமையான கவிதையை வடித்திருக்கிறாய் நம் தோழிக்காக....

    பதிலளிநீக்கு