வியாழன், 13 ஆகஸ்ட், 2009

உன் -பிரிவை நினைக்கையிலே மனம் நோகுதடி பெண்ணே

ஈரைந்து மாதம் - .உனை .......
சுமப்ந்து பெற்றதும் -எனக்கு .......
கச்டமில்லையடி பெண்ணே.......

கஷ்டப்பட்டு உனை .......
சீராட்டி பாராட்டி வளர்த்தும் -எனக்கு .....
கச்டமில்லையடி பெண்ணே........

அறிவாய் தெளிவாய் பண்பை .....
பாசமாய் நேசம் காட்டும் குணவதியாய் ......
உன்னை -வளர்த்தும் -எனக்கு ....
கச்டமில்லையடி பெண்ணே.......

உன் -ஆசையை நிறைவேட்ற ........
டிகிரி படிக்கவைத்து -உன்னை .....
பட்டதாரியாக்கியதும் -எனக்கு ....
கச்டமில்லையடி பெண்ணே........

இருபது வருடங்களில் எத்தனையோ ....
சூழ்நிலைகளில் நீ எங்களை .......
பிரிந்து வாழ்ந்ததும் -எனக்கு ......
கச்டமில்லையடி பெண்ணே......

நீ -எங்கள் மகள் -எங்களுக்கே.....
சொந்தமானவள் என்றும் .....
எங்களுடன் இருக்கின்றாய் -என்ற .....
மனம் நிறைந்த சந்தோசம் .....
மாறும் -நிலை நினைக்கையிலே.......
மனம் -பாரமாகுதடி பெண்ணே......

ஆனால் -திருமணம் எனும் பந்தத்தில் .....
காலடி வைத்து எங்களை -நீ ......
பிரியும் நிலையை நினைதாலே.....
மனம் -பாரமாகுதடி பெண்ணே


தாரை வார்த்து குடுத்து விட்டால் .....
நீ -அடுத்து வீட்டுய் பெண்ணாகி விடுவாயே ....
எங்களுக்கு தூரத்து சொந்தமாகவும் ......
அவர்களுக்கு இறுதிவரை சொந்தமாகவும் ....
மாறிவிடுவாயே பெண்ணே.....
நானும் -பெண்நென்ற நிலையில் .....
இன் -நிலை கடந்து வந்தவள் என்றாலும் ....
இந்த சந்தோஷ பிரிவை நினைகையிலும் ...
உன் -பிரிவை நினைக்கையிலேயே .......
மனம் பாரமாகுதடி பெண்ணே....

நீ -வாழபோகும் சூழ்நிலை .......
இனி -எப்படியோ .....
உன் -வீட்டாரின் குணங்கள் எப்படியோ .....
உன் -துணையின் பண்புகள் எப்படியோ ....
அதையெல்லாம் சரி செய்து -நீ .....
வாழ போகும் நிலை எப்படியோ ......
உன் -பிரிவை நினைக்கையிலேயே ......
மனம் பாரமாகுதடி பெண்ணே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக