சனி, 4 ஜூலை, 2009

மழை
சிலு சிலு காற்றும் .....
சீறி பாயும் மழையும் ....
நடு நடுங்கும் குளிரும் ...
என் -எலும்பில் ஊடுருவி பாய்ந்தாலும் ...
என் -மனம் அசையாது .....
எடுத்த முடிவில் உறுதி கொண்டதே ...
என் -அசையா முடிவை ....
என் -மனம் அறிந்ததால் .....
என்னை தடுத்திடவில்லை ....
நீ -வருவதோ எப்போதோ .....
ஒருமுறைதான் உன்னை விட்டுவிட ....
என் -மனம் ஒப்பவில்லை ....
உன்னை முழுமையாக அனுபவித்து .......
சந்தோசிப்பதை தடுத்திட யாருமில்லை ....
வருவது வரட்டும் இதன் ....
பின் விளைவுகளை ...
அனுபவிக்க போவதும் நாந்தானே ....
பிறகு பார்த்து கொள்ளலாம் ....
உன்னை ரசிக்க துடிக்கும் .....
என் -ஆவலையும் ஆசையையும் ....
ஏமாற்றாமல் உடனே சீக்கிரம் ....
வந்துவிடு மழையே வந்துவிடு .....


சிரிப்பு
காற்று என்ன சொன்னதோ .....
மரம் இப்படி குலுங்கி .....
குலுங்கி சிரிகிறதே ....
ஒருவேளை வருண பகவான் ......
நான் -உங்களுக்கு என் ......
அன்பினை வாரி வாரி ....
வழங்கி உங்களை ......
புகழ்பட செயவேன் -என்று .....
இயற்கையிடம் கூறியதை .......
ஒட்டு கேட்ட காற்று .......
மரத்திடம் சொல்லியதாலே ...
வருணனின் நிலையில்லா ......
நிலையினை நன்கு உணர்ந்ததாலோ ....
மரம் குலுங்கி குலுங்கி சிரித்ததோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக