வெள்ளி, 3 ஜூலை, 2009

அனாதை
பிறந்து அனாதையானாலும் .....
நல்ல நாயாக பிறந்திடல் வேண்டும் ....
கலவையில் பிறந்திட்ட .....
வித்தியாசமான உருவமும் ....
முக அமைப்பும் கிட்டிட்டால் ......
உயர்ந்த வி. ஐ .பி இன செல்லமாகவும் ...
பிரபலங்களின் செல்லமாகவும் ....
அன்பின் அரவணைப்பில் வளரலாம் ....
குழந்தையாக பிறந்து அனாதையானாள் ....
அடிமைகளாகவும் பிட்சைகாரர்களாகவும் ..
வளர்கின்றனர் உணவோ வெறும் .....
ஓரு டீயும் பண்ணும் -ஆனால் ...
நாய்க்கோ உயர்தர உணவுகள் ...
இருக்கும் இடத்திற்கு தேடி வரும் ...
மாதா மாதம் மருத்துவ கண்காணிப்பும் ....
டானிக்கும் தினமும் குளியல் .....
பவுடர் சோப்பு சீப்பு நாகரீக /.....
போசாகிர்க்கு குறைவில்லையே ....
அது மட்டுமா செல்லமாக ...
அவர்களுடன் வாகனங்களில் ......
உல்லாச பயணங்களும் பிக்நிக்கும் ......
மனிதபிறவி பாவமென் புரிகிறது ...
நல்ல பெற்றோர் கிடைதிடின் .....
நல்வாழ்வு கிட்டும் -அனாதையானாள் ...
நல்ல சோறும் குளிக்க நீரும் .....
உடுத்தஉடையும் அன்பு செலுத்த ...
நாதியும் கிடையாதே ......
நாயாக பிறந்தால் ஆயிரம் .....
லட்சங்கள் என பணம் குடுத்தும்
வாங்கி செல்லமென்று அறிமுகப்படுத்தி .....
சந்தோசிக்கும் பணம் படைத்தோர் .....
ஆளுக்கொரு அனாதைகளை தத்து எடுத்து ....
வளர்தலே போதுமே இந்தியாவில் ....
அனாதைகள் இல்லாமலே போகலாம்.....
நாய்க்கு மாதம் செலவிடும் .....
இரண்டு மூன்று ஆயிரங்களை ...
ஓரு அணாதைகு செலவிட்டால் ....
அந்த மனித உயிர் சந்தோசித்து வாளுமே ...
வேண்டும் என்றால் நாயைபோல் ....
வள் வள் வள் நாங்களும் ......
அன்பாக குலைகின்றோம் ......
கடவுளே மனிதர்களில் அனாதையாக ...
படைக்க விரும்புவோரை இன்னி .....
நாயாக பிறக்க செய் ....
உன்னை சபிக்காமல் வணங்கி .....
நன்றி சொல்லுவார்கள் ...
உண்மையில் பக்தியாக .....
உழைக்காமல் வெறும் குலைக்கும் ....
நாய்களுக்கு கிடைக்கும் மரியாதையும் .....
அன்பும் அரவணைப்பும் ....
உழைக்கும் ஏழைகளுக்கும்.......
அன்னதைகளுக்கும் கிடைபதில்லையே .....
இறைவா அனாதைகளுக்கு ....
நீதான் இனி கருணை காட்டவேண்டும் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக