செவ்வாய், 17 நவம்பர், 2009

மருந்து
காயம் பட்ட உன் -இதயத்திற்கு ...
கண்ணீர் மட்டும் மருந்து -இல்லை .....

அன்பை பொழியும் உறவுகளும் ....
உன் -நலனை விரும்பும் .....
நட்புகளின் உதவும் அன்பும் .....
உன் கண்ணீருக்கு மருந்துதான் ......

பெண்ணை படைத்தவன் இவ்வுலகில் .....
உன்னை படைத்தது உன் நன்மைகே ......

அன்பு எனும் தெய்வநிலை -உணற்வும் .....
பாசம் நேசம் எனும் ......
கட்டுக்குள் எதையும் கட்டுவிக்கும் ....
உன்னத நிலையை -நீ ....

அம்மா மணைவி சகோதரி குழந்தைகள் .....
ஈன -உணரவே இறைவன் ......
கண்களோடு உன்னை படைதான் ......

கண்ணனுக்கு தெரிந்தால் ....
இறைவனுக்கு மதிப்பு இல்லை ....
பக்தி எனும் தெய்வ நிலையில் ......
மனதிலே நீ இறைவனை அறியலாம் ....

இறைவனை சேற நிணைத்தால் ........
உன் - மனதிலே அவனை தேடு தோழா .....


அச்சமில்லை அச்சமில்லை
துன்பமெனும் உச்சியில் இருந்து ..........
வீழும் நிலை வந்திடின் .......
குடும்பமெனும் உறவு வந்து .......
காத்து அரவணைதிடின்.......
அச்சமில்லை அச்சமில்லை .......
அச்சமென்ப தில்லையே.......

இல்ல மெணும் .கோவிலினில் ......
வறுமை எனும் பேய்புகின் .......
உயிரின்பாதி வாழ்வின்பாதி ......
துணை கொடுக்கும் தைரியத்தில் ....
வாழ்க்கை எனும் கடலில் நீந்திட ......
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே.......


இன்பம் துன்பம் எது வந்தாலும் .....
பங்கெடுத்து பகிர்ந்திடும் ........
நட்பு எனும் நல்லிதயங்கள் .........
நமக்கு வாய்த்த போதிலும் ........
.அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே.....
...
வாழ்நிலையில் கடைநிலை என .....
அறிந்து நின்ற போதிலும் .....
கண் இமைபோல் காத்திடும் ......
கண்மணிகளை ஈன்றிருதால் ........
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே........

பெண்மகவோ ஆண்மகவோ ...
பெற்றது எதுவாகின் ....
உழைப்பு படிப்பு எனும் .....
பெருநிலையை தந்து விட்டால் .....
அச்சமில்லை அச்சமில்லை ..........
அச்சமென்ப தில்லையே....


வாழ்க்கை தத்துவம்
கர்ப்ப கிரகமெனும்கருவறையில் -உதித்து ...
பிரசவமென்று பூ உலகை தொட்டு .............
வாழ்க்கை எனும் சுழற்சியில் சுழன்று ............
இறபெனும் கடைநிலை எய்தி ..........
கல்லறையில் தூங்கி .........
பூமிதாயுடன் சங்கமிபதே.............
மனித வாழ்கையின் தத்துவம் .........

கல்லறையில் உறங்கும் கருமாக்கள் .......
நல்லவையோ தீயவையோ .......
இறபெனும் நிலைக்கு பின் ....
யாவும் இறைவனாக நிணைய்து .....
தொழபடுவதே வாழ்கையின் தத்துவமோ .......

இருபவனோ இல்லாதவனோ .........
வாழும் நிலையில் உயர்வு தாழ்வு -இருந்தாலும் .......
அறிந்தவனோ அறியாதவனோ ........
மரணத்திற்கு பின் செல்லுவதோ ......
இடுகாடு எனும் பொது -இடம் ......
பேதாங்கள் பந்ததாகள் இன்றி .......
இருக்கும் கிடைக்கும் இடங்களில் .....
வித்தியாசமின்றி அடக்கமாவதும் எறிக்படுவதும் .....
மனித வாழ்கையின் தத்துவமோ ......




எரிபதிலும் புதைபதிலும் .....
உயர்வு தாழ்வு பேதம் இருந்தாலும் .......
புதைபதற்கோ எல்லோருக்கும் .........
இரண்ட்டிக்கு ஆறடி நிலம்தான் ...
எரிபதற்கோ ஒரு தீ குச்சிதான் ........
இதுவும் மனித வாழ்க்கை தத்துவமே

திங்கள், 16 நவம்பர், 2009

அழகு ஏது ?
பிரகாசிக்கும் சூரியன் -இல்லாது ..............
பகலுக்கு ஏது அழகு ?............

ஜொலிக்கும் நிலவு -இல்லாது ...............
இரவுக்கு ஏது அழகு ?.........

கொஞ்சும் மழலை -இல்லாது .............
வீட்டுக்கு ஏது அழகு .?......

அன்பு என்பது -இல்லாது ............
உயிர்களுக்கு ஏது அழகு .?.......

உயிரில்பதி. உணர்வில்பாதி -இல்லாது ..........
இல்லறத்திற்கு ஏது அழகு ?...........

நீயே என் சுவாசமாய் -இல்லாது ........
என் உயிருக்கு ஏது அழகு? ........



தீ
பொறாமை எனும் -தீ ...............
பொறுப்பில்லாத சோம்பேறி .............

பொறுப்பு எனும் -தீ ............
உண்மையான உழைப்பாளிகள் ...........

கற்பு எனும் -தீ ...........
கணவனே கண்கண்ட தெய்வம் என்பவர் ............

வெறுப்பு எனும் -தீ ...........
நிலையில்லா மனபோராடம் ...........

பண்பு எனும் -தீ .........
பட பட வைரமாய் ஜொலிபதர்க்கு .........

அன்பு எனும் -தீ .........
இறப்பிலும் இணைவது .........

காதல் எனும் -தீ .......
கண்டதும் கண் மூடி தனமாய் மயங்குவது ............

நட்பு எனும் -தீ .........
நன்மை தீமைகளில் பங்கெடுப்பது .............

இல்லறம் எனும் -தீ .............
இன்ப துன்பங்களில் இணைந்திருப்பது ........

சந்தோசம் எனும் -தீ ..........
பெருமை சாதனைகளில் அடைவது ...........

மடமை எனும் -தீ ..........
கண்மூடி இல்லாததை இருளில் தேடுவது ...........

அறிவு எனும் -தீ .........
அண்டசராசரங்களையும் அறிந்து தெளிவது


ருசிக்க
வெற்றி எனும் இனிப்பை -ருசிக்க ..............
வேதனை எனும் கசப்பின் ........................
எல்லை தொட்டு வரவீண்டும் ............

அன்பு எனும் இனிப்பை -ருசிக்க ..............
நேசம் எனும் நெகிழ்வின் ..............
எல்லை தொட்டு வர வேண்டும் ..........

காதல் எனும் இனிப்பை -ருசிக்க ...........
வேதனை வெற்றி அன்பு நேசம் எனும் .......
எல்லை தொட்டு வரவேண்டும் ............



நட்பு (பூ )
ஆயிரம் பூக்கள் .......
விடியலில் மலர்ந்தாலும் ...................
அந்தியில் உதிர்ந்து விடும் .......
வாடி மீண்டும் செழிக்காத வகையில் ..............
ஆனால் -உதிராத பிரியாத வாடினாலும் ......
மீண்டும் உயிர் தெழும்......
ஒரே பூ ."நட்பு ".........

முகத்தை நோக்கி ............
புனகையில் தொடங்கி .....
அகத்தில் ஆராய்ந்து .............
கண்ணீரில் கலந்து ......
சந்தோஷத்தில் குதுகலித்து .....
துக்கத்தை பங்கிட்டு .......
சுமையை தாங்கி ........
தோல் கொடுக்கும் .......
தோழமையே "நட்பு "எனும் (பூ )

வியாழன், 5 நவம்பர், 2009

பெண் என்றால் கேவலமோ ?
மணைவி -எனை மறந்த உண்னை விட்டு ........
நானும் மழலைகளும் போகின்றோம் ............
மதி மறந்த உன்னுடனோ .........
ஒருநாளும் வாழ்ந்திடேன் ............

கணவன் -ஏனோ ?ஏனோ? எதற்காகவோ ?

மணைவி -நீ குடிகாரன் என அறிந்தும் ...............
சூதாடி என அறிந்தும் .................
மனம் நொந்து வாழ்ந்தாலும் ........
விடு மணைவி மக்கள் -என .............
தினம் இங்கு வந்திடுவாய் .........
இப்போதோ யாரோ ஓரு .......
கள்ள சிறுகியுடன் திரிகின்றாய் ...........
இதை ஏற்க என்னால் முடியாது .......

கணவன் -ஊர் உலகத்தில் இல்லாததா .........
நான் -அப்படிதான் இருபேன் .....
வாய்மூடி இருபதுவே உன் கடமை ........
பட்டிகாட்டு சிறுக்கி நீயே.........

மணைவி -பட்டிகாட்டு சிறுகிதான் ..........
பத்து முடிக்காத படிக்காத முண்டம்தான் .............
ஆனால் -மானம் இல்லாத சிறுகியில்லை..............
மானம் கெட்டு உன்னுடன் வாழ்வதற்கோ ..............



கணவன் -இங்கிருந்து போய் என்ன செய்வாயோ .........
பிட்சை எடுபாயோ சீர்கெட்டு திருவாயோ ...
என்ன திமிரடி உனக்கு ............
மணைவி -ஏட்டு படிபென்றாலும் ............
உலகை அறிந்தவளே நானும் ..........
பாரதி கண்ட புதுமை பெண்களில் .................
.இனி நானும் ஒருதியாவேன் ....................

பத்து பாத்திரம் தேய்தும் .........
கூலிவேலை செய்தும் ...............
என் -கண்மணிகளுக்கு கஞ்சியாவது ............
ஊற்றுவேன் உரம் பாய்ந்த ............
கிராமத்து கட்டை இது .............
இனி -உன் -காலை சுற்றி கிடக்க .............
ஈன பிறப்பில்லை நானும் ..............
மானமாய் வாழ முடியாது -போனால் ............
உயிரையும் விடுவேன் குழந்தைகளுடன் ........

என் -போல பெண் இனங்கள் துணிந்தாலே ......
உன் -போன்ற நாய் குணங்கள் ........
மாற்றப்படும் பிறர் படுத்தும் -அவமானத்தால் .....
சீர் கெட்ட சிறு புத்தி படைதவனே.........

பொறுமையின் சிகரமும் பெண்தான் .............
சீறி பாயும் கடலும் பெண்தான் ...............
உன் -இளமை திமுரில் நீ ...............
வீசும் காசுக்காக வருபவளோ ...........
காரியம் முடிந்ததும் போய் விடுவாள் .........
அப்போது -மணைவி மக்கள் என ...........
எங்களை தேடி வராதே..............

இந்தா -நீ கட்டிய தாலி ........
கைம்பெண்ணாக நினைத்தே
இங்கிருந்து போகிறோம் .........
இந்த ஓரு முழ கயிற்றிகு ...........
நான் தந்த பவிதரமும் .............
புனிதமும் வீணானது ............
தகுதியில்லா உனக்காக .....
இதை சுமந்து -நான் .............
தந்த மரியாதை வீநே............
அந்த தகுதியும் இனி .......
உனக்கு எப்போதும் இல்லையடா ..........
போகின்றோம் போகின்றோம் ....
வீணான என் கணவா .....

புதன், 4 நவம்பர், 2009

அப்பாவுக்கு திருமணம்
தோழி -உண்னுள்ளே உண்னுள்ளே ..................
எத்தனை எத்தனை சோகம் ..............
என்னுள்ளே என்னுள்ளே..........
அதில் - எத்தனையோ கேள்வி..............

கேட்டாலும் மறைகின்றாய் .............
நீ -சிரிப்பதுதான் எப்போது ......
கண்ணீரில் கறைகின்றாய் .....
தண்ணீரில் அதை மறைகின்றாய் .....
போதும் போதும் அதை ...........
சொல்லிடு இப்போது என்னிடமே...........

உயிரான உயிர் தோழி ........
சில நாட்கள் நட்பானாலும் ..........
உன் மீது மதிப்புண்டு .-உன் ...........
வாழ்வில் அக்கறை உண்டு .............
சொல்லு நீ சொல்லு என் -தோழி ...............

இவள் - வேன்டாமே என் தோழி ...............
அறிந்தாலே அழுதிடுவாய்.............
உன் -இளம் பஞ்சு மனதினிலே .... .
கணம் ஏறி போய் விடுமே............
சுமை தங்கி நீயாவாய் ........
சுகமிழந்து போய்விடுவாய் .............
வேண்டாம் வேண்டாம் என் தோழி ............

அப்பாவிற்கு மருமணமாம் .......
அறுபதிலே திருமணமாம் ............
இளமை தாண்டி இன்பம் -மறந்து .......
முபதிலே முதிர் கண்ணியாய் -நானும் ........
பருவத்தின் வாயிலில் அடுத்தடுத்து .......
திருமணத்திற்கு காத்திருக்கும் ...........
என் -.நான்கு தங்கைகளும் ..........
வேலை செய்து சம்பாதித்து கொடுத்ததும் ...............

அப்பாவை கவனிக்க ஆள் -இல்லை
என்று குற்றம் சொல்லி ..........
அத்தையின் திருமணமாகாத ..............
நாற்பது வயது மகளை ........
அப்பாவின் நலம் கருதி ..........
மனம் முடிப்பதாக அத்தையின் ........
நீலி கண்ணீரில் கரைந்த ..........
அப்பாவும் இனங்கிடவே ..............
அப்பாவுக்கு திருமணமாம் .......
இதை -எப்படி சொல்லுவது ...........
என்ன வென்று சொல்லுவது .........
நீ -சொல்லு என் தோழி ...............

இனி அப்பாவும் அம்மாவுமாக ....
தங்கைகளுக்கு வாழ்வு அமைத்து தந்து ..........
பிறவி கடனை தீர்பதுவே...........
என் கடமை என்பதுவே........
என் கண்ணீரின் கராணமே .....
என் தோழி என் தோழி .....


அம்மா செல்லம்
உன் -மனமோ ஓரு நந்தவனம் .........
உன் -சிரிப்போ ஓரு மலர் கொத்து ...........

உன் -அன்போ ஓர் நீர் ஊற்று ......
அதில் -நணைவதே -என் .....
உயிர் மூச்சு உயிர் மூச்சு ..........

அம்மா -உன் கர்ப்ப சிப்பியில் .........
கண்டெடுத்தமுத்து என்னை ........

உன் -அன்பெனும் தேனாற்றில் -நனைத்து ........
ஒளிவிட்டு பிரகாசிக்க செய்தாயே.................

அம்மா என்னும் அன்பிற்கு ........
படியாத உயிர் உண்டோ ..............

உன் -நினைவுகளே என் கணவாகும் .....
அதை செய்வதே என் கடமையாகும் .....

உன்-நினைவுகளை நடத்தி விட்டால் ........
என் -கணவுகளும் ஜெயித்துவிடும் .............

இடையில் -நீ மறைந்து விட்டாலும் ............
உன் -கணவுகளுடன் நான் வாழ்கின்றேன் ....

உன் -மகன் நான் என்று ..........
ஊர் மெச்சா வாழ்ந்திடுவேன் .........
அம்மா செல்லம் நாந்தனே ........


தங்கையும் தாரமும்
தங்கை -தங்கத்தையும் ...........
உடனேதருவாள் கையில் ............
அவசரத்திற்கு உதவ ,,,,,,,,,,,,,,,

தாரம் -தா தா தா தா என்று .........
ரம் போல் போதை ஏற்றி ............
எதையாவது கேட்டு நச்சரிப்பாள் -எப்போதும்